விஜயவாடா: காதலியுடனான அந்தரங்க வீடியோவை வாட்ஸ்-அப்பில் சுற்றுக்கு விட்ட இளைஞர் தலைமறைவானார். அவரைக் கைது செய்ய மகளிர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே பாயகாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்(19)-ணும் அதே பகுதியைச் சேர்ந்த சேசு(21) என்ற இளைஞரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். அவ்வாறு காதலியுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்கத்தை சேசு தனது செல்போனில் படம் எடுத்தார். இந்த அந்தரங்க வீடியோக் காட்சியை ‘வாட்ஸ்-அப்’ மூலம் தனது நண்பர்களுக்கு சுற்றுக்கு அனுப்பினார். இது அந்தப் பகுதி முழுவதும் பரவியது. இந்த வீடியோ குறித்து போலீசில் புகார் செய்ய அந்தப் பெண் தயங்கினார். ஆனால் அகில பாரத மகளிர் அமைப்பு இந்த பிரச்னையை முன்னிறுத்து, அந்த இளைஞரைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்த முன் வந்தது. இது பற்றி போலீசிலும் அந்த அமைப்பினர் புகார் செய்தனர். இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். தலைமறைவான இளைஞர் சேசுவைக் கைது செய்ய வேண்டும் என்று மகளிர் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதை அடுத்து போலீஸார் அந்த இளைஞரைத் தேடி வருகின்றனர்.

