December 6, 2025, 6:09 AM
23.8 C
Chennai

சன்யாசி ஆகியிருக்க வேண்டிய மோடியை திசை திருப்பிய சுவாமிஜி முக்தி அடைந்தார்!

ramakrishna mission head swamiji died - 2025

கோல்கத்தா:

பேலூர் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைமை சுவாமிஜி ஆத்மஸ்தானந்தா மஹராஜ், ஞாயிற்றுக் கிழமை நேற்று ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில்  முக்தி அடைந்தார். அவர் முதுமையின் காரணத்தால் வரும் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 98. அவரது இறுதிச் சடங்குகள் திங்கள் கிழமை இன்று இரவு 9.30 மணிக்கு பேலூர் மடத்தில் நடைபெறுகிறது.

1919ம் வருடம் தாகா அருகில் உள்ள சபாஜ்புரில், புத்த பூர்ணிமா தினத்தில் பிறந்தவர் சுவாமிஜி. இவர் தமது மிகச் சிறிய வயதிலேயே ராமகிருஷ்ண மிஷனில் ஈடுபாடு கொண்டு இணைந்தார். 22ம் வயதில் 1941 ஜனவரி 3ம் நாள் ராமகிருஷ்ண மடத்தில் துடிப்புடன் சேர்ந்தார். தம்மை சேவைப் பணிகளில் முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார்.

1966ல் ஒரு முறை சுவாமி ஆத்மஸ்தானந்தா மஹராஜ், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ண ஆச்ரமத்துக்கு வந்திருந்தார். அப்போது, சுவாமி விவேகானந்தரின் மீது பெரும் பற்றும் மதிப்பும் கொண்டிருந்த இளவயது மோடி அவரைச் சந்தித்து, தாமும் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து, துறவி ஆக விரும்புவதாகத் தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் செலவழித்தார் மோடி. அப்போது, மடத்தை சுற்றிப் பார்க்கவும், மடத்தில் துறவிகள் குறித்து பார்த்து அறியவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மோடிக்கு! ஆனால், அவரது இயல்பைக் கண்ட சுவாமிஜி, உனக்கு துறவு விதிக்கப்படவில்லை; வேறு பணிகள் உனக்காகக் காத்திருக்கின்றன; நீ தனித்திருக்க வேண்டியவன் இல்லை, மக்களுடன் கலந்து இருக்க வேண்டியவன் என்று கூறி, அவர் மடத்தின் துறவி ஆவதை மறுத்து திசை திருப்பி விட்டார்.

சுவாமிஜி குறித்து நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, “சுவாமிஜியின் திடீர் இழப்பு எனக்கு தனிப்பட்ட வகையில் பெரும் இழப்பு. அவருடன் நான் என் வாழ்நாளின் மிக முக்கியமான காலகட்டத்தில் கழித்திருக்கிறேன்” என்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories