எடப்பாடி, தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரும் மனு மீது இன்று விசாரணை

madras-high-court

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் பெருமளவில் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கின. அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.900 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான கணக்குகளை குறிப்பிட்ட ஆதாரங்கள் சிக்கின. இதை அடுத்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்தத் தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டுப் பெற்ற வழக்கறிஞர் வைரக்கண்ணன், கடந்த ஏப்ரல் மாதமே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவரது மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories