எடப்பாடி, தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரும் மனு மீது இன்று விசாரணை

madras-high-court

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் பெருமளவில் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கின. அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.900 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான கணக்குகளை குறிப்பிட்ட ஆதாரங்கள் சிக்கின. இதை அடுத்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்தத் தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டுப் பெற்ற வழக்கறிஞர் வைரக்கண்ணன், கடந்த ஏப்ரல் மாதமே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவரது மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories