மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்கும், என்றும் உலகக் கோப்பை போட்டிகள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்யப் பட்டுவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் உலவும் செய்திகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்திய அணி தனது முதல் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வென்றது. பிறகு நாளை ஞாயிறு தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்கும் என வாட்ஸ்-அப்பில் வதந்தி உலா வருகிறது. அதில், இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன. மேட்ஸ் ஃபிக்ஸிங் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் சரி, முன்னாள் சாம்பியன்களுக்கும் சரி.. இந்த உலகக் கோப்பை கிடைக்காது. தென் ஆப்பிரிக்கா அணிதான் உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஞாயிறு நாளைய போட்டியில் இந்தியா தோற்குமாம். ஜிம்பாப்வே அணியும் இந்திய அணியைத் தோற்கடிக்குமாம். இவ்வாறு அடுத்து நடைபெறும்அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் ஒரு முடிவை அது வெளியிட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தகுதி பெற்று மோதும் என்றும், அதில், தென்ஆப்பிரிக்கா வெல்லும் என்றும் வதந்தி பரவியது. ஏற்கெனவே கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கிரிக்கெட் போட்டிக்கு இது மிகப் பெரிய சோதனையாகவே பார்க்கப்படுகிறது. இதில் ஒரு சுவாரஸ்யம், இந்தத் தகவலில் கூறப்பட்டுள்ள தகவல்களில், இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்த 9 தகவல்களும் உண்மையாகவே நடந்துள்ளது. எனவே இந்தக் கருத்து கணிப்பில் இருப்பது போல் போட்டி முடிவுகள் அனைத்தும் அமைந்தால் அது, ஐ.சி.சி.க்கு மிகப் பெரிய தலைவலியாகவே அமையும்.
‘மேட்ச் ஃபிக்ஸ்ட்’- இந்தியா தோற்கும்; தென்னாப்பிரிக்கா சாம்பியனாகும்: வாட்ஸ்-அப் வதந்திகள்
Popular Categories


