நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து விலகல்: அமர்த்தியா சென் கடிதம்

AmartyaSen புது தில்லி: நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ள பொருளாதார மேதை அமர்த்தியா சென், மத்திய அரசின் அனுமதி தாமதமாவதால் தாம் இரண்டாவது முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நோபல் பரிசு பெற்றவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அமர்த்தியா சென், பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது முதல் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், அமர்த்தியா சென் மீண்டும் பல்கலைக்கழக வேந்தராக தொடர வேண்டும் என்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமர்த்தியா சென் இரண்டாவது முறையாக மீண்டும் அந்தப் பதவியை வகிப்பதற்காக விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் இந்த விண்ணப்பம் மீது முடிவு எடுக்க மத்திய அரசு தாமதப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் தனது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவுக்கு அவர் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், ‘‘எனது விண்ணப்பம் மீது முடிவு எடுக்க ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் அதில் அவர்கள் காட்டும் ஈடுபாடில் உறுதியின்மை ஆகியவை நாளந்தா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துக்கும், அதன் கல்வி முறைக்கும் உதவாது. பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு ஒருமனதாக என்னை பதவியில் தொடரும்படி கூறியிருந்தாலும், பல்கலைக்கழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இதன் வேந்தராகத் தொடருவதில் இருந்து நானாகவே விலகிக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

Entertainment News

Popular Categories