February 24, 2026, 7:05 PM
29.8 C
Chennai

இந்தியாவின் தூய்மையான மாநிலம் திரிபுரா-பிரதமர் மோடி..

1808762 pm modi 1 - 2026

சந்தர்ப்பவாத அரசியலால் பொதுமக்களுக்கு நன்மை செய்ய முடியாது என பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதை பாஜக அரசுதான் புரிந்து கொண்டது. அதனால்தான் அது பழங்குடியின சமூகத்தை முதல் தேர்வாக மாற்றியுள்ளது.அகர்தலாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் பிரதமரின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

பல தசாப்தங்களாக, சந்தர்ப்பவாத அரசியலை கடைபிடிக்கும் கட்சிகளால் ஆளப்பட்டு வந்ததால் திரிபுரா மாநிலம் அதன் முக்கியத்துவத்தை, வளர்ச்சியை இழந்து இருந்தது. இதனால் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த மாதிரியான சித்தாந்தம், இந்த மாதிரியான (அரசியல் கட்சிகளின்) மனநிலையால் பொதுமக்களுக்கு நன்மை செய்ய முடியாது.

எதிர்மறையை எவ்வாறு பரப்புவது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும், எந்த நேர்மறையான வளர்ச்சித் திட்டங்களும் அவர்களிடம் இல்லை.

அதிகார அரசியலால் நமது பழங்குடி சமூகம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சியின்மை வருத்தம் அளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், தேர்தல் மற்றும் வன்முறை சம்பவங்களின் போது மட்டுமே பேசப்பட்டு வந்தன. பாஜக இந்த அரசியலை மாற்றியுள்ளது, பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதைப் பாஜக அரசுதான் புரிந்து கொண்டது. அதனால்தான் அது பழங்குடியின சமூகத்தை முதல் தேர்வாக மாற்றியுள்ளது.

தற்போது இரட்டை எஞ்சின் அரசின் முயற்சியால், வடகிழக்கு பகுதியில் சர்வதேச வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக திரிபுரா மாறி வருகிறது. ஏழைகளுக்கு வீடுகள் வழங்குவதில் திரிபுரா முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் திரிபுரா குறித்து இன்று விவாதிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தூய்மைப் பிரச்சாரத்தை திரிபுரா மக்கள்தான் ஒரு பொது இயக்கமாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாக, இந்தியாவின் தூய்மையான மாநிலமாக திரிபுரா வந்துள்ளது. திரிபுர சுந்தரி அன்னையின் ஆசியுடன், திரிபுராவின் வளர்ச்சிப் பயணம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

Topics

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories