புது தில்லி: வங்கி ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், வேலைநிறுத்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று, ஊழியர் சங்கங்களை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இருதரப்பிலும் சுமுகமான சூழலில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதே பிரச்னையில் தீர்வை ஏற்படுத்த உதவும். பொதுத் துறை வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்ட வழியைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து, வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும். வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் வரும் 25 முதல் 28ம் தேதி வரை வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். திங்கள் நாளை அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
வேலை நிறுத்தத்தைக் கைவிடுக: வங்கி ஊழியர்களுக்கு ஜேட்லி வலியுறுத்தல்
Popular Categories