மசூத் அசார்னு ஒருத்தர் இல்லவே இல்லைன்னு சொல்ல வேண்டியதுதான் பாக்கி!

pakistan terror funding3 - 2026

மசூத் அசார் என்ற ஒருவர் இல்லவே இல்லை; அது இந்தியாவின் ஒரு கற்பனைப் படைப்பு என்று சொல்வதுதான் பாக்கி இருக்கிறது… அதைத் தவிர அத்தனை பொய்களையும் சொல்லிவிட்டது பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படவே இல்லை என அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளதைக் கேட்டால் நமக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே அப்படித்தான் தோன்றும்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மீதான இஸ்லாமிய மதவெறி பயங்கரவாத தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது, இஸ்லாமிய மதவெறி இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மது! பேரழிவைச் செய்தது தாங்கள் தான் என்று அந்த அமைப்பு கூறிய பிறகு, அதைத் தடை செய்ய வேண்டும் என்றும், அதன் தலைவர் மசூத் அசாரை கைது செய்து ஒப்படைக்க வேண்டு என்றும் இந்தியா வலியுறுத்தியது.

ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ மொஹம்மத்தான் என்று இந்தியா தகுந்த ஆதாரங்களைத் தந்து குற்றம் சாட்ட வேண்டும் என்று குறியது பாகிஸ்தான். இதை அடுத்து, இதுதொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது இந்தியா.

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

03 Sep17 Pakistan - 2026

இந்நிலையில் பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் எங்கள் நாட்டில் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பெயரில் எந்த பயங்கரவாத இயக்கமும் இல்லை என்றார்.

ஆனால், ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மௌலானா மசூத் அசார் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

மேலும், மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று கூறினார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி!

இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அளித்த பேட்டியில் கடந்த காலத்திலும் ஜெய்ஷ் இ மொஹம்மதை இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அரசு பயன்படுத்தியது என்று கூறியிருந்தார்.

Pervez Musharraf and Imran Khan - 2026

அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் தற்போது எடுத்து வரும் நடவடிக்கையை
வரவேற்கிறேன். நான் பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த போது, இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பைத்தான் பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்தி வந்தது.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

என்னையும் கொல்வதற்கு அந்த அமைப்பு இருமுறை முயற்சி மேற்கொண்டது. அப்போதைய சூழல் வேறு மாதிரியாக இருந்ததால், நான் அந்த அமைப்பை ஒடுக்க முயற்சி எடுக்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கம் பாகிஸ்தானில் இல்லவே இல்லை என்று மறுத்துள்ளார் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர். இத்தனை பேர் வலுவாகக் கூறியும், இத்தகைய பொய்களை பாகிஸ்தான் கூறி வருகிறது அந்நாட்டின் நம்பகத் தன்மையை சர்வதேச நாடுகளுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories