புதுதில்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தனது திருமண பொன்விழாவைக் கொண்டாடினார். அவர் கமலாவைத் திருமணம் செய்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி நேற்று அவர் தனது தில்லி இல்லத்தில் திருமண பொன்விழாவைக் கொண்டாடினார். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகள் பிரதீபா செய்திருந்தார். இந்த விழாவில் பிரபலங்கள் பலர் வருகை தந்து, அவரிடம் ஆசி பெற்றனர். அத்வானியின் இல்லம் திருமண விழா இல்லம் போல் களை கட்டியிருந்தது. காலை முதல் பிரபலஸ்தர்கள் வந்திருந்து தங்கள் வாழ்த்தையும் ஆசியையும் அளித்தனர். வந்திருந்த நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில், பாரம்பரிய வழக்கப்படி அத்வானி–கமலா தம்பதியர் மணமகன், மணமகளாக மாறி மாலைகள் சூட்டி மகிழ்ச்சிகரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். இருவர் முகத்திலும் சந்தோஷம் தவழ இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுனர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக., தலைவர்கள், இந்தி திரை நட்சத்திரங்கள் விது வினோத் சோப்ரா, அனு மாலிக், குல்ஷன் குரோவர் உள்ளிட்டவர்கள், ஆன்மிகத் தலைவர்களான சுவாமி அனதீஷ்வரா, சுவாமி சிதானந்தா உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு அத்வானி தம்பதியரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
50ஆம் ஆண்டு திருமண விழா: அத்வானிக்கு மோடி, அன்சாரி நேரில் வாழ்த்து
Popular Categories


