மலைவாழ் மக்கள் பழங்குடியினர் மீது பாசமும், அன்பும், எப்போதும் உண்டு-மோடி..

1146077 psiae - 2026

மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் மீது எனக்கு தனிப்பட்ட பாசமும், அன்பும், அக்கரையும் எப்போதும் உண்டு என டில்லியில் இன்று நடந்த பழங்குடியினர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், பழங்குடியினத்தின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் இன்று ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசியதாவது

இந்தியாவில் இன்று பாரம்பரிய பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பழங்குடியின சமூகத்தினரால் தயாரிக்கப்படும் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பழங்குடியின பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் மூங்கிலால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. அதேபோல் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.

முந்தை அரசின் ஆட்சிக் காலத்தில், மூங்கில் வெட்டுவது சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. பாஜக ஆட்சியில் மூங்கிலை புல் வகைக்குள் கொண்டு வந்து அதன் மீதான தடைகளை எல்லா நீக்கி விட்டோம்.இதன் மூலம் மூங்கிலால் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து பெரிய தொழிலாக மாறி வருகிறது.

21ம் நூற்றாண்டின் இந்தியா ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற கொள்கையின் படி அரசு சிறப்பாக செயல்படுகிறது. அனைவருக்கு வளர்ச்சி என்பதே எங்களின் இலக்கு. கடந்த 8-9 ஆண்டுகளாக, ஆதி மஹோத்ஸவ் போன்ற பழங்குடியினர் சார்ந்த நிகழ்வுகள் நாட்டில் நடைபெறுகிறது. இது போன்ற பல திட்டங்களில் நானும் ஒரு அங்கமாகிவிட்டேன்.

பழங்குடியினரின் நலன் என்பது எனது தனிப்பட்ட உறவுகள் மற்றும் உணர்வுகள் சார்ந்த விஷயம் ஆகும். மலைவாழ் மற்றும் பழங்குடியினர் மக்கள் மீது தனிப்பட்ட பாசமும், அன்பும், அக்கரையும் எப்போதும் எனக்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories