புது தில்லி 2015-2016ஆம் ஆண்டுக்கான தனது ரயில்வே நிதி நிலை அறிக்கையினை இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. 12 மணிக்குத் துவங்கிய அவர் உரை பிற்பகல் 1.15 வரை நீடித்தது. இந்த ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லை, கட்டணம் உயர்வில்லை, ஆய்வுகள் முடிந்த பின்பே புதிய ரயில்கள் குறித்து அறிவிப்பு; 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட் முன்பதிவு, 800 கி.மீ. தொலைவுக்கு மீட்டர் கேஜ் பாதைகள் அகல ரயில்பாதைகளாக மாற்றம் என பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. பின்னர் 1.15க்கு தனது உரையை சுரேஷ் பிரபு நிறைவு செய்தார்.

