கர்நாடக தேர்தல் முடிந்தது; பெட்ரோல் விலை உயர்ந்தது!

Published:

cars petrol - 2026

புது தில்லி: கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 20 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிந்த நிலையில் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை ஒவ்வொரு நாளும் சந்தை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வந்தன. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெட்ரோல் டீசல் விலை அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதால், கடந்த 20 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

ஈரானுடன் அணுசக்தி உடன்பாட்டை அமெரிக்கா முறித்துக் கொண்டதால், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இனிவரும் நாட்களில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரக் கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 69.56 ஆக இருந்தது, இன்று 23 காசு உயர்த்தப்பட்டு ரூ. 69.79 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 77.43 ஆக இருந்தது இன்று, 18 காசு உயர்த்தப்பட்டு ரூ. 77.61 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img