கட்டணம் உயர்வில்லை; 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம்: ரயில்வே பட்ஜெட் தாக்கல்

புது தில்லி: ரயில் கட்டணங்கள் உயர்வில்லை; தற்போது 60 நாட்களாக இருக்கும் முன்பதிவு இனி 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு என்ற நிலை என இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். 2015 – 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்து வருகிறார். இதில், புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரை நிகழ்த்தி வருகிறார். நவீன இந்தியாவில் ரயில்வே ஒரு தனிப்பட்ட ஒருங்கிணைப்பு நிர்வாகம் எனக் குறிப்பிட்ட அவர், அனைத்து இந்தியர்களுக்காகவும் வளமான தேசம் குறித்து கனவு காணும் பிரதமர் மோடிக்கு நன்றி எனக் கூறி உரையைத் துவக்கினார். இந்திய ரயில்வேயில் முதலீட்டுச் சூழலில் நீட்டிப்பு தன்மை அவசியம் என்றும், வருங்காலத் தலைமுறையினர் நல்வாழ்வு பெற வேண்டும் என்றும், ரயில்வே நீண்ட குறைவான முதலீடு சுழற்சி காரணமாக பாதிக்கபட்டு உள்ளது; இது நீண்ட சரிவை ஏற்படுத்தியதாகவும் கூறினார் அமைச்சர். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: ரயில்வேயின் 492 பிரிவுகள் 100 சதவீத வேகத்துடன் இயங்குகிறது. 228 பிரிவுகள் 80 -100 % வேகத்தில் இயங்குகிறது. அடுத்த 5 வருடங்களில் திறன் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் இருப்புப் பாதை 1.38 லட்சம் கிலோ மீட்டரில் 10 சதவீதம் விரிவு படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வேயில் 8.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் ரயில்வேயை மேம்படுத்த 4 திட்டங்கள் உள்ளன. நாட்டின் சமூக – பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வேத் துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்; ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன. ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள் அதிகம் தேவை. சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை. பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை; அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள். கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்; 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம். பசுமை கழிவறைகள்; ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம். 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.; 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்; 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள். நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138 மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories