புது தில்லி: ரயில் கட்டணங்கள் உயர்வில்லை; தற்போது 60 நாட்களாக இருக்கும் முன்பதிவு இனி 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு என்ற நிலை என இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். 2015 – 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்து வருகிறார். இதில், புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரை நிகழ்த்தி வருகிறார். நவீன இந்தியாவில் ரயில்வே ஒரு தனிப்பட்ட ஒருங்கிணைப்பு நிர்வாகம் எனக் குறிப்பிட்ட அவர், அனைத்து இந்தியர்களுக்காகவும் வளமான தேசம் குறித்து கனவு காணும் பிரதமர் மோடிக்கு நன்றி எனக் கூறி உரையைத் துவக்கினார். இந்திய ரயில்வேயில் முதலீட்டுச் சூழலில் நீட்டிப்பு தன்மை அவசியம் என்றும், வருங்காலத் தலைமுறையினர் நல்வாழ்வு பெற வேண்டும் என்றும், ரயில்வே நீண்ட குறைவான முதலீடு சுழற்சி காரணமாக பாதிக்கபட்டு உள்ளது; இது நீண்ட சரிவை ஏற்படுத்தியதாகவும் கூறினார் அமைச்சர். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: ரயில்வேயின் 492 பிரிவுகள் 100 சதவீத வேகத்துடன் இயங்குகிறது. 228 பிரிவுகள் 80 -100 % வேகத்தில் இயங்குகிறது. அடுத்த 5 வருடங்களில் திறன் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் இருப்புப் பாதை 1.38 லட்சம் கிலோ மீட்டரில் 10 சதவீதம் விரிவு படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வேயில் 8.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் ரயில்வேயை மேம்படுத்த 4 திட்டங்கள் உள்ளன. நாட்டின் சமூக – பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வேத் துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்; ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன. ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள் அதிகம் தேவை. சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை. பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை; அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள். கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்; 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம். பசுமை கழிவறைகள்; ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம். 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.; 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்; 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள். நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138 மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

