WPL 2023: முதல் கோப்பையை வென்றது மும்பை அணி!

women ipl - 2026

— கு.வை. பாலசுப்பிரமணியன் —

மகளிர் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற ஐந்து அணிகளில் மும்பை, உ.பி., டெல்லி ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயின. டெல்லி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வானது.

மும்பை அணியும் உ.பி. அணியும் எலிமினேட்டர் போட்டியில் 24ஆம் தேதி மோதின. இதில் மும்பை அணி முதலில் அதிரடியாக ஆடி 182/4 ரன் கள் குவித்தது. பின்னர் ஆடிய உ.பி. அணி 110 ரன் கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி மார்ச் 26 ஆம் தேதியன்று மும்பையில் இருக்கும் ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஷபாலி வர்மா 11 (4) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் அடுத்து வந்த கேப்ஸி 0, ஜெனிமா ரோட்ரிகஸ் 9, மரிசன் கேப் 18 (21) என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

போதாக்குறைக்கு மறுபுறம் போராடிய கேப்டன் மெக் லென்னிங் 5 பவுண்டரியுடன் 35 (29) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். அதனால் 75/6 என்ற ஸ்கோருடன் தடுமாறிய அந்த அணியை கடைசி நேரத்தில் சீக்கா பாண்டே (3 பவுண்டரி 1 சிக்சருடன் 27, 17 பந்துகள்) ராதா யாதவ் (2 பவுண்டரி 2 சிக்சருடன் 27, 12 பந்துகள்) இருவரும் ரன் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்து ஓரளவு காப்பாற்றினர். இருப்பினும் 20 ஓவரில் டெல்லி போராடி 131/9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக ஹெய்லே மேத்யூஸ் மற்றும் இஸி ஓங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அதைத் தொடர்ந்து 132 என்று சுலபமான இலக்கை துரத்திய மும்பைக்கு ஹெய்லே மேத்தியூஸ் 13 (12) யாஷ்க்கா பாட்டியா 4 (3) என தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 23/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹெர்மன்ப்ரீத் கௌர் பொறுப்புடன் செயல்பட்டு 5 பவுண்டரியுடன் 37 (39) ரன்கள் குவித்து காப்பாற்றிய போது முக்கிய நேரத்தில் ரன் அவுட்டானார்.

அதன் காரணமாக போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் இலக்கு குறைவாக இருந்ததால் அவருடன் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட நட் ஸ்கீவர் (7 பவுண்டரியுடன் 60* ரன், 55 பந்துகள்) எமிலியா கெர் (14* ரன் எட்டு பந்துகளில்) நன்றாக ஆடினர். அதனால் 19.3 ஓவரில் 134/3 ரன்கள் எடுத்த மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

ஆட்ட நாயகியாக நேட் சிவிர் ப்ரண்டும் தொடர் நாயகியாக ஹெய்லி மேத்யூஸும் அறிவிக்கப்பட்டார்கள். அதிக ரன் கள் அடித்த வீராங்கனை மேக் லேனிங்; அதிக விக்கட்டுகள் எடுத்தவர் ஹெய்லி மேத்யூஸ்

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories