ரயில்வே பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published:

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இன்று தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துகள்: முன்னேற்றத்திற்கான, எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, பயணிகள் வசதியை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் இது. சாமான்ய மக்களின் தேவையை கருத்தில் கொண்டு வேகம், அளவு, சேவை மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் கொண்ட பட்ஜெட். இந்திய ரயில்வேயின் சரித்திரத்தில், இது ஒரு திருப்பு முனை பட்ஜெட். முதன் முறையாக, தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் நவீனப்படுத்துதல் ஆகியவற்றை அடக்கிய பட்ஜெட் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Related articles

Recent articles

spot_img