சென்னை: ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சியாக, வசதியாக, பாதுகாப்பாக, சுகாதாரமாக பயணம் செய்ய வேண்டும் என்பதை இந்த பட்ஜெட் உறுதி முன்பதிவுக்கு 120 நாட்கள், முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது இரயில்; நிலையங்களிலும் சுத்தமான கழிப்பறை என்று வசதிகளை மேம்படுத்தப்பட்டிருப்பது அசதியுடன் பயணம் செய்பவர்கள் வசதியுடன் பயணம் செய்யட்டும் என்ற நல்லுள்ளத்தோடு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காற்று வருகிறதோ இல்லையோ, துர்நூற்றம் வீசுகிறது என்ற நிலையிலே இன்று கழிப்பறைகள், இரயில்பயணத்தில் அயற்சி வருகிறதோ சிறுநீர் அழற்சி வரும்படியே கழிப்பறைகள் இருந்ததை இன்று மாற்றி ‘டீழை வுழடைநவ’ வசதிகள் என்பது வசதிக்காக மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்காகவும் செய்திருக்கும் ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது. அதேபோல் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது குறிப்பாக பெண்கள், பெரியோர் பயணம் பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இரட்டை வழிப்பாதையில் தூரம் அதிகரித்திருக்கிறது. இரயில் பயணத்தின் வேகம் அதிகரித்து பயண நேரம் குறைந்திருப்பது இன்றைய அவசர உலகில் அவசியமாகிறது. நாகர்கோவில் கடற்கரை பாதை வழியாக இணைப்பது மகிழ்ச்சி. 8.50 இலட்சம் கோடி முதலீடு என்பது காங்கிரஸ் அரசால் கடன் சுமையால் அமுக்கப்பட்டிருந்த துறைக்கு ஆறுதல். கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதும் ஆறுதல். விவசாயிகளுக்கு உதவும்படி சரக்கு வசதிகள் வரவேற்கத்தக்கது. இன்று இது இளைஞர்களின் உலகம் அவர்களுக்கு உதவுமாறு இணையதள வசதி இணையற்ற புதிய திட்டங்கள் இல்லை என்ற விமர்சனம் தேவையற்றது. காங்கிரஸ் அரசு போல் நடைமுறைப்படுத்தமுடியாததை அறிவித்துவிட்டு கிடப்பில் போடுவதை விட, செய்ய முடிவதை ஆராய்ந்து சொல்வது நலம் என்ற வகையில் புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்கப்படும் என்பது அறிவுப்பூர்வமான அறிவிப்பு, அறிவியல் பூர்வமான சிந்தனை. – என்று கூறியுள்ளார்.

