IPL 2023: தோனி அணிக்கு எதிராக ‘ஆட்ட நாயகன்’ ஆன அஷ்வின்!

ipl 2023 matches - 2026
#image_title

ஐ.பி.எல் 2023 – 13ஆம் நாள் – 12.04.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஐ.பி.எல் 2023 தொடரின் 13ஆம் நாளான நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. ராஜஸ்தான் அணி (175/8, பட்லர் 52, படிக்கல் 38, அஷ்வின் 30, ஹெட்மேயர் 30, ஆகாஷ் சிங், தேஷ்பாண்டே, ஜதேஜா தலா 2 விக்கட்) சென்னை அணியை (172/6, கான்வே 50, ரஹானே 31, ஜதேஜா 25, தோனி 32, அஷ்வின் 2/25, சாஹல் 2/27) 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மகேந்திரசிங் தோனி அணித்தலைவராக விளையாடும் 200ஆவது ஐ.பி.எல் ஆட்டம் இது. டாஸ் வென்ற அவர் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (10 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான பட்லரும் (36 பந்துகளில் 52 ரன்) படிக்கலும் (26 பந்துகளில் 38 ரன்) இனைந்து நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

சஞ்சு சாம்சன் இன்று ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அஷ்வின் பட்லரோடு இணைந்து அடுத்த 7 ஓவர்கள் விளையாடி 30 ரன்கள் அடித்தார். அவரும் பட்லரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க ஹெட்மேயர் 18 பந்துகளில் 30 ரன் அடித்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 175 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தார்.

176 ரன் என்ற எளிய இலக்கை அடைய ஆடத்தொடங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (10 பந்துகளில் 8 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ரஹானே (19 பந்துகளில் 31 ரன்) கான்வேயுடன் (38 பந்துகளில் 50 ரன்) இணைந்து நன்றாக விளையாடினார்.

ராஜஸ்தானின் சுழல் பந்து ஜாம்பவான்களாகிய அஷ்வின், சாஹல் ஆகிய இருவரின் பந்து வீச்சில் ரஹானே, ஷிவம் டுபே (அஷ்வின்), கான்வே, அம்பாதி ராயடு (சாஹல்) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன் எடுக்க வேண்டிய நிலை; தோனி, ஜதேஜா இருவரும் ஆடிக்கொண்டிருந்தனர். கடைசி ஓவரில் 2 சிக்ஸ் அடித்து திடீர் பரபரப்பை தோனி ஏற்படுத்திய போதிலும் இலக்கை எட்ட முடியாததால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. அஷ்வின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories