IPL 2023: தோனி அணிக்கு எதிராக ‘ஆட்ட நாயகன்’ ஆன அஷ்வின்!

ipl 2023 matches - 2026
#image_title

ஐ.பி.எல் 2023 – 13ஆம் நாள் – 12.04.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஐ.பி.எல் 2023 தொடரின் 13ஆம் நாளான நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. ராஜஸ்தான் அணி (175/8, பட்லர் 52, படிக்கல் 38, அஷ்வின் 30, ஹெட்மேயர் 30, ஆகாஷ் சிங், தேஷ்பாண்டே, ஜதேஜா தலா 2 விக்கட்) சென்னை அணியை (172/6, கான்வே 50, ரஹானே 31, ஜதேஜா 25, தோனி 32, அஷ்வின் 2/25, சாஹல் 2/27) 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மகேந்திரசிங் தோனி அணித்தலைவராக விளையாடும் 200ஆவது ஐ.பி.எல் ஆட்டம் இது. டாஸ் வென்ற அவர் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (10 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான பட்லரும் (36 பந்துகளில் 52 ரன்) படிக்கலும் (26 பந்துகளில் 38 ரன்) இனைந்து நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.

சஞ்சு சாம்சன் இன்று ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அஷ்வின் பட்லரோடு இணைந்து அடுத்த 7 ஓவர்கள் விளையாடி 30 ரன்கள் அடித்தார். அவரும் பட்லரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க ஹெட்மேயர் 18 பந்துகளில் 30 ரன் அடித்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 175 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தார்.

176 ரன் என்ற எளிய இலக்கை அடைய ஆடத்தொடங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (10 பந்துகளில் 8 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ரஹானே (19 பந்துகளில் 31 ரன்) கான்வேயுடன் (38 பந்துகளில் 50 ரன்) இணைந்து நன்றாக விளையாடினார்.

ராஜஸ்தானின் சுழல் பந்து ஜாம்பவான்களாகிய அஷ்வின், சாஹல் ஆகிய இருவரின் பந்து வீச்சில் ரஹானே, ஷிவம் டுபே (அஷ்வின்), கான்வே, அம்பாதி ராயடு (சாஹல்) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன் எடுக்க வேண்டிய நிலை; தோனி, ஜதேஜா இருவரும் ஆடிக்கொண்டிருந்தனர். கடைசி ஓவரில் 2 சிக்ஸ் அடித்து திடீர் பரபரப்பை தோனி ஏற்படுத்திய போதிலும் இலக்கை எட்ட முடியாததால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. அஷ்வின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories