IPL 2023: தோனி அணிக்கு எதிராக ‘ஆட்ட நாயகன்’ ஆன அஷ்வின்!

ipl 2023 matches - 2026
#image_title

ஐ.பி.எல் 2023 – 13ஆம் நாள் – 12.04.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஐ.பி.எல் 2023 தொடரின் 13ஆம் நாளான நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. ராஜஸ்தான் அணி (175/8, பட்லர் 52, படிக்கல் 38, அஷ்வின் 30, ஹெட்மேயர் 30, ஆகாஷ் சிங், தேஷ்பாண்டே, ஜதேஜா தலா 2 விக்கட்) சென்னை அணியை (172/6, கான்வே 50, ரஹானே 31, ஜதேஜா 25, தோனி 32, அஷ்வின் 2/25, சாஹல் 2/27) 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மகேந்திரசிங் தோனி அணித்தலைவராக விளையாடும் 200ஆவது ஐ.பி.எல் ஆட்டம் இது. டாஸ் வென்ற அவர் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (10 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான பட்லரும் (36 பந்துகளில் 52 ரன்) படிக்கலும் (26 பந்துகளில் 38 ரன்) இனைந்து நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

சஞ்சு சாம்சன் இன்று ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அஷ்வின் பட்லரோடு இணைந்து அடுத்த 7 ஓவர்கள் விளையாடி 30 ரன்கள் அடித்தார். அவரும் பட்லரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க ஹெட்மேயர் 18 பந்துகளில் 30 ரன் அடித்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 175 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தார்.

176 ரன் என்ற எளிய இலக்கை அடைய ஆடத்தொடங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (10 பந்துகளில் 8 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ரஹானே (19 பந்துகளில் 31 ரன்) கான்வேயுடன் (38 பந்துகளில் 50 ரன்) இணைந்து நன்றாக விளையாடினார்.

ராஜஸ்தானின் சுழல் பந்து ஜாம்பவான்களாகிய அஷ்வின், சாஹல் ஆகிய இருவரின் பந்து வீச்சில் ரஹானே, ஷிவம் டுபே (அஷ்வின்), கான்வே, அம்பாதி ராயடு (சாஹல்) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன் எடுக்க வேண்டிய நிலை; தோனி, ஜதேஜா இருவரும் ஆடிக்கொண்டிருந்தனர். கடைசி ஓவரில் 2 சிக்ஸ் அடித்து திடீர் பரபரப்பை தோனி ஏற்படுத்திய போதிலும் இலக்கை எட்ட முடியாததால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. அஷ்வின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories