ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா துவக்கம்..

IMG 20230413 WA0026 - 2026
#image_title

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா ஏப்ரல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.இவ்விழாவில் 14ம் தேதி கருட சேவை, 19ம் தேதி திருத்தேரோட்டம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது

தென்னிந்தியா முழுமைக்கும் ஆன்மிகத் தொண்டில் சிறந்து விளங்கியவர்கள் விஜயநகரப் பேரரச மன்னர்கள்.

அதிலும் அன்னியர் பிடியில் நாடு இருந்த அந்த சமயத்தில், இவர்களது பணி அளப்பற்கரியது. 13-ம் நூற்றாண்டில் அன்னியர் படையெடுப்புக்குப் பின்னர் சிதைவு பட்டிருந்த ஸ்ரீரங்கம் கோயில் முழுமையும் சீரமைத்தவர் விஜயநகர மன்னர் விருப்பன்ன உடையார்.

60 ஆண்டுகளாக நின்று போயிருந்த திருவிழாக்களை மீண்டும் நடத்தினார். இதற்காக 17,000 பொற்காசுகளையும், 53 கிராமங்களையும் தானமாகக் கொடுத்தார்.

பாமர கிராம மக்களிடமும் உதவிகள் கோரினார். தானியங்களையும், கால்நடைகளையும் மக்கள் கோயிலுக்கு வழங்கினர்.

ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . அப்போது சுவாமி நம்பெருமாள் நியமனப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விடுவதாக பட்டயம் எழுதும் நிகழ்ச்சி முக்கியமானது.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீரங்கம் அருகில் உள்ளது இந்த கிராமம். 13-ம் நூற்றாண்டு சம்பவங்களை நினைவுபடுத்துவதாக இப்போதும் இந்நிகழ்ச்சி அரங்கேறுகிறது.

ஶ்ரீரங்கத்தில் ஏப்11ல் தொடங்கிய விருப்பன் திருநாள் 600 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சித்திரை உற்சவம். இது தொடங்கப்பட்டது 1383 ஆம் ஆண்டு. இந்த ஆண்டு 640-வது உற்சவம். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.

13-ம் நூற்றாண்டில் அன்னியர் படையெடுப்புக்குப் பின்னர் ஸ்ரீரங்கம் உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் மதுரைக்கும், திருப்பதிக்கும் இடம்பெயர்ந்தார். 48 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீரங்கம் வந்தார். விஜயநகரப் பேரரச மன்னர் விருப்பன்ன உடையார் 17,000 பொற்காசுகளும், 52 கிராமங்களும் தானமாக கொடுத்து இவ்விழாவைத் தொடங்கி வைத்தார். இதனால் விருப்பன் திருநாள் எனப்படுகிறது. இவ்விழாவில் 14ம் தேதி கருட சேவை, 19ம் தேதி திருத்தேரோட்டம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories