February 20, 2026, 9:14 PM
27.3 C
Chennai

ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா துவக்கம்..

IMG 20230413 WA0026 - 2026
#image_title

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா ஏப்ரல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.இவ்விழாவில் 14ம் தேதி கருட சேவை, 19ம் தேதி திருத்தேரோட்டம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது

தென்னிந்தியா முழுமைக்கும் ஆன்மிகத் தொண்டில் சிறந்து விளங்கியவர்கள் விஜயநகரப் பேரரச மன்னர்கள்.

அதிலும் அன்னியர் பிடியில் நாடு இருந்த அந்த சமயத்தில், இவர்களது பணி அளப்பற்கரியது. 13-ம் நூற்றாண்டில் அன்னியர் படையெடுப்புக்குப் பின்னர் சிதைவு பட்டிருந்த ஸ்ரீரங்கம் கோயில் முழுமையும் சீரமைத்தவர் விஜயநகர மன்னர் விருப்பன்ன உடையார்.

60 ஆண்டுகளாக நின்று போயிருந்த திருவிழாக்களை மீண்டும் நடத்தினார். இதற்காக 17,000 பொற்காசுகளையும், 53 கிராமங்களையும் தானமாகக் கொடுத்தார்.

பாமர கிராம மக்களிடமும் உதவிகள் கோரினார். தானியங்களையும், கால்நடைகளையும் மக்கள் கோயிலுக்கு வழங்கினர்.

ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . அப்போது சுவாமி நம்பெருமாள் நியமனப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விடுவதாக பட்டயம் எழுதும் நிகழ்ச்சி முக்கியமானது.

ஸ்ரீரங்கம் அருகில் உள்ளது இந்த கிராமம். 13-ம் நூற்றாண்டு சம்பவங்களை நினைவுபடுத்துவதாக இப்போதும் இந்நிகழ்ச்சி அரங்கேறுகிறது.

ஶ்ரீரங்கத்தில் ஏப்11ல் தொடங்கிய விருப்பன் திருநாள் 600 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சித்திரை உற்சவம். இது தொடங்கப்பட்டது 1383 ஆம் ஆண்டு. இந்த ஆண்டு 640-வது உற்சவம். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.

13-ம் நூற்றாண்டில் அன்னியர் படையெடுப்புக்குப் பின்னர் ஸ்ரீரங்கம் உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் மதுரைக்கும், திருப்பதிக்கும் இடம்பெயர்ந்தார். 48 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீரங்கம் வந்தார். விஜயநகரப் பேரரச மன்னர் விருப்பன்ன உடையார் 17,000 பொற்காசுகளும், 52 கிராமங்களும் தானமாக கொடுத்து இவ்விழாவைத் தொடங்கி வைத்தார். இதனால் விருப்பன் திருநாள் எனப்படுகிறது. இவ்விழாவில் 14ம் தேதி கருட சேவை, 19ம் தேதி திருத்தேரோட்டம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories