செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள் சிகிச்சைகளை கண்காணிக்கிறது எய்ம்ஸ் மருத்துவர் குழு!

stalin met senthil balaji - 2026
#image_title

நேற்று ஒருபுறம் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருக்கிறார், அவரை மூன்று முறை பெயர் சொல்லி அழைத்த போதும், அசையக்கூட இல்லை என்றெல்லாம் அமைச்சர்கள் சேகர் பாபு உள்ளிட்ட சிலர் சொல்லிக் கொண்டிருந்த போது, உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர், செந்தில் பாலாஜி நன்றாக உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று சான்றளித்தார்கள். முதல்வர் ஸ்டாலின் சென்று பார்த்த போது, எழுந்து அமர்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார் செந்தில் பாலாஜி. இத்தகைய காட்சிகளால் செந்தில் பாலாஜி விவகாரம் பெரும் நாடகம் என்ற ரீதியில் அரசியல் மட்டத்தில் கருத்துகள் பரவின.

இதனிடையே, இதய பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள், உடனுக்குடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

அமலாக்கத் துறையினர் கைது செய்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏட்ரியோவென்ட்ரிகுலர், மிட்ரல், ட்ரைகுஸ்பிட் ஆகிய மூன்று வால்வுகளில் 60 முதல் 80 சதவீத அடைப்பு இருப்பதாகக் கூறினர். அதனால் பைபாஸ் அறுவை சிகிச்சை தான் மேற்கொள்ள வேண்டும் என்றும், எவ்வளவு விரைந்து செய்ய முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என்றும் பரிந்துரைத்தனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆனால், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அமலாக்கத் துறையினர் திருப்தி அடையவில்லை. அந்த அறிக்கை குறித்தும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்தும் உறுதி செய்ய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்கள் ஐந்து பேர் கொண்ட குழு, செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்தது.

இதன் பின், செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை, கொடுக்கப் படும் மருந்துகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அமலாக்கத் துறையினர் அனுப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories