செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள் சிகிச்சைகளை கண்காணிக்கிறது எய்ம்ஸ் மருத்துவர் குழு!

stalin met senthil balaji - 2026
#image_title

நேற்று ஒருபுறம் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருக்கிறார், அவரை மூன்று முறை பெயர் சொல்லி அழைத்த போதும், அசையக்கூட இல்லை என்றெல்லாம் அமைச்சர்கள் சேகர் பாபு உள்ளிட்ட சிலர் சொல்லிக் கொண்டிருந்த போது, உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர், செந்தில் பாலாஜி நன்றாக உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று சான்றளித்தார்கள். முதல்வர் ஸ்டாலின் சென்று பார்த்த போது, எழுந்து அமர்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார் செந்தில் பாலாஜி. இத்தகைய காட்சிகளால் செந்தில் பாலாஜி விவகாரம் பெரும் நாடகம் என்ற ரீதியில் அரசியல் மட்டத்தில் கருத்துகள் பரவின.

இதனிடையே, இதய பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள், உடனுக்குடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

அமலாக்கத் துறையினர் கைது செய்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏட்ரியோவென்ட்ரிகுலர், மிட்ரல், ட்ரைகுஸ்பிட் ஆகிய மூன்று வால்வுகளில் 60 முதல் 80 சதவீத அடைப்பு இருப்பதாகக் கூறினர். அதனால் பைபாஸ் அறுவை சிகிச்சை தான் மேற்கொள்ள வேண்டும் என்றும், எவ்வளவு விரைந்து செய்ய முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என்றும் பரிந்துரைத்தனர்.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

ஆனால், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அமலாக்கத் துறையினர் திருப்தி அடையவில்லை. அந்த அறிக்கை குறித்தும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்தும் உறுதி செய்ய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்கள் ஐந்து பேர் கொண்ட குழு, செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்தது.

இதன் பின், செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை, கொடுக்கப் படும் மருந்துகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அமலாக்கத் துறையினர் அனுப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories