இந்தியா Vs ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர்; ஓர் அலசல்!

ind vs afg - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலகக் கோப்பை டி20 போட்டி வருகின்ற ஜூன் 2024இல் நடக்க உள்ளது. அனத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் இதற்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியும் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் ஒரு டி20 தொடரை விளையாடி உள்ளது.

          மூன்று டி20 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களையும் இந்திய அணி வென்றது. முதல் ஆட்டம் மொஹாலியில் நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிறகு 158 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இந்திய அணி 17.3 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து ஆட்டத்தில் வெற்றி கண்டது. இரண்டாவது ஆட்டம் இந்தூரில் நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் ஆடி 20 ஓவரில் 172 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு இந்திய அணி 15.4 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 173 ரன் கள் எடுத்து வெற்றி பெற்றது.

          இரண்டு ஆட்டங்களிலும் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ஷிவம் டுபே ஆகியோரும் பவுலர் அக்சர் படேலும் சிறப்பாக ஆடினர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் டி20 ஆட்டங்களில் ஆட வந்துள்ள ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் சரியாக ஆடவில்லை. கோலியாவது கொஞ்சம் ரன் எடுத்தார். ஆனால் ரோஹித் ஷர்மா முதல் ஆட்டத்தில் பூஜ்யம் ரன்னுக்கு ‘ரன் அவுட்’ ஆனார்; இரண்டாவது ஆட்டத்தில் மறுபடியும் பூஜ்யம் ரன்னுக்கு பந்தை விக்கட்டின் மீது ஆடி போல்ட் ஆனார்.

ரோஹித் ஷர்மாவின் அதிரடி

          ஆனால் நேற்று பெங்களூருவில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா ஆடிய ஆட்டமே வேறு. டாஸ் வென்று ஆஃப்கானிஸ்தான் அணி இந்திய அணியை பேட் செய்யச் சொன்னது. ரோஹித் ஷர்மாவும் ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ரோஹித் ஷர்மா ஒரு தடுமாற்றத்துடன் தொடங்கியதாகத்தான் தோன்றியது. அதற்கேற்றாற்போல மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஜெய்ஸ்வால் நாலு ரன்னிற்கு ஆட்டமிழந்தார்; அடுத்த பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார்; நாலாவது ஓவரின் கடைசிப் பந்தில் டுபே அவுட்டானார்; ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 22/4; ரோஹித் ஷர்மா 13 பந்துகள் விளையாடி 8 ரன் எடுத்திருந்தார்.

அடுத்ததாக விளையாட வந்தது ரிங்கு சிங். இவர் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடக்கூடியவர். மீதமுள்ள 14 ஓவர்களையும் நின்று ஆடுவாரா தெரியவில்லை. ரோஹித் ஷர்மாவும் ஃபார்மில் இல்லை; என்ன ஆகுமோ என அனைவரும் எண்ணிய நிலையில் ரோஹித் ஷர்மா இறுதி வரை ஆடி 69 பந்துகளில் 11 ஃபோர், 8 சிக்சர்களுடன் 121 ரன் அடித்தார். இது அவருக்கு டி20இல் ஐந்தாவது சதம். டி20இல் ஐந்து சதமடித்த ஒரே வீரர் இவர்தான். கடைசி 5 ஓவர்களில் ரோஹித்தும் ரிங்குவும் 103 ரன்கள் எடுத்தனர்.

          ரோஹித் தன்னுடைய திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். ரிங்கு சிங், தான் ஒரு அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல, தேவைப்பட்டால் நிதானமாக ஆடி ரன் எடுப்பவர் என்பதை நிரூபித்தார். ஆட்டம் சூப்பர் ஓவர் வரை போனது. முதல் சூபர் ஓவரும் டை ஆனதால், இரண்டாவது சூப்பர் ஓவருக்குப் போனது. முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றது,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories