IPL 2024: ஒரு ரன்னில் பெற்ற வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முப்பத்தியின்றாம் நாள்
ஐபிஎல் 2024 – 21.04.2024
இரண்டு ஆட்டங்கள்

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

இரண்டாவது ஆட்டம் முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ்

பெங்களூரு – கொல்கொத்தா மயிரிழையில் வெற்றி

கொல்கொத்தா அணி (222/6, பில் சால்ட் 48, ஷ்ரேயாஸ் ஐயர் 50, ஆண்ட்ரே ரசல் 27*, ரமன்தீப் சிங் 24*, சிங்கு சிங் 24, யஷ் தயால் 2/56, காம்ரூன் கிரீன் 2/35 ) பெங்களூரு அணியை (221, வில் ஜேக்ஸ் 55, ரஜத் படிதர் 52, தினேஷ் கார்த்திக் 25, கரன் ஷர்மா 20, விராட் கோலி 18, ரசல் 3/25, ஹர்ஷித் ராணா 2/33, சுனி நரேன் 2/34) 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (14 பந்துகளில் 48 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சுனில் நரேன்  (10 ரன்) இருவரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கொத்தா அணி பவர்பிளே ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 75 ரன் கள் எடுத்தது.

          பத்தாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 158/4 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் ரன்ரேட்டைக் குறைக்கும் வண்ணம் பந்துவீசினர். ட்ராவிஸ் ஹெட் (32 பந்துகளில் 89 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) அபிஷேக் ஷர்மா (12 பந்துகளில் 46 ரன், 2 ஃபோர், 6 சிக்சர்), மர்க்ரம் (1 ரன்), கிளாசன் (15 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (27 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ஷபாஸ் அகமது (29 பந்துகளில் 59 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்), அப்துல் சமது (8 பந்துகளில் 13 ரன்) என அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடியதால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 222 ரன் எடுத்தது.

          223 ரன் என்ற கடின இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான விராட் கோலி (7 பந்துகளில் 18 ரன்) 2.1ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.  3.1ஆவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான ட்யு பிளேசிஸ் ஆட்டமிழந்தார்.

 அதன் பின்னர் வில் ஜேக்ஸ் (32 பந்துகளில் 55 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (23 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை 138 ரன் என்ற அளவிற்கு உயர்த்தினர். 12ஆவது ஓவர் முதல் பந்தில் வில் ஜேக்ஸும் நாலாவது பந்தில் ரஜத் படிதரும் ஆட்டமிழந்தனர். இதற்குப் பிறகு காமரூன் கிரீன் (6 ரன்), மஹிபல் லோமர் (4 ரன்), சிராஜ் (பூஜ்யம் ரன்), ஃபெர்கூசன் (1 ரன்) ஆகியோர் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். ஆயினும் சுயேஷ் பிரபுதேசாய் (24 ரன்), தினேஷ் கார்த்திக் (25 ரன்), கரண் ஷர்மா (20 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 221 ரன் எடுத்தது.

இதனால் கொல்கொத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஏறத்தாழ வெற்றியை அடையும் நிலைக்கு வந்து பின்னர் துரதிருஷ்டவசமாக 1 ரன்னில் தோல்வியை பெங்களூரு அணி சந்தித்தது. ஆண்ட்ரு ரசல் 3 ஓவர் வீசி 25 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார்.

          ஹைதராபாத் அணியின் ஆண்ட்ரு ரசல் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காகவும் சிறப்பான பந்துவீச்சிற்காகவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

          பஞ்சாப் அணியை (142, பிரப்சிம்ரன் சிங் 35, ஹர்பிரீத் பிரார் 29, சாம் கரன் 20, ஹரபிரீத் சிங் 14, சாய் கிஷோர் 4/33, மோஹித் ஷர்மா 2/32, நூர் முகம்மது 2/20) குஜராத் டடன்ஸ் அணி (19.1 ஓவரில் 146/7, ஷுப்மன் கில் 35, ராகுல் திவாத்தியா 36*, சாய் சுதர்ஷன் 31, ஒமர்சாய் 13, விருத்திமான் சாஹா 13, ஹர்ஷல் படேல் 3/15, லிவிங்க்ஸ்டோன் 2/19) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் இன்றும் விளையாடவில்லை. அதனால் அணித்தலைவராகச் செயல்பட்ட சாம் கரன் (20 ரன்) தொடக்கவீரராக பிரப்சிம்ரன் சிங் (35 ரன்) உடன் களமிறங்கினார்.

இவர்கள் இருவரைத்தவிர ஹர்பிரீத் பிரார் (29 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (13 ரன்), ஹர்பிரீத் சிங் (14 ரன்) ஆகிய வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். ரிலீ ரோஸ்சௌ (9 ரன்), லிவிங்க்ஸ்டோன் (6 ரன்), ஷஷாங்க் சிங் (8 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (3 ரன்) ஹர்ஷல் படேல் (பூஜ்யம் ரன்) ஆகியொர் இன்று நிலைத்து ஆடவில்லை. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 142 ரன் எடுத்தது.

          143 என்ற சுலபமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சாஹா (13 ரன்), விராட் கோலி (29 பந்துகளில் 35 ரன்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். சாய் சுதர்ஷன் 31 ரன் எடுத்து அசத்தினார்.

டேவிட் மில்லர் (4 ரன்), அசமத்துல்லா ஒமர்சாய் (13 ரன்), ஷாருக் கான் (8 ரன்), ரஷீத் கான் (3 ரன்) ஆகியோர் இன்று சிறப்பாக ஆடவில்லை. ராகுல் திவாத்தியா ஆட்டமிழக்காமல் 36 ரன் எடுத்ததனால் குஜராத் அணி 19.1 ஓவரில் 7 விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்து 3 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியின் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

21.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்761120.677
கொல்கொத்தா752101.206
ஹைதராபாத்752100.914
சென்னை74380.529
லக்னோ74380.123
குஜராத்8448-1.055
மும்பை7346-0.133
டெல்லி8356-0.477
பஞ்சாப்8264-0.292
பெங்களூரு8172-1.046

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories