IPL 2024: மும்பை Vs லக்னோ

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

41ம் நாள் ஐபிஎல் 2024 – 30.04.2024 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணியை (143/7, நெஹால் வதேரா 46, டிம் டேவிட் 35*, இஷான் கிஷன் 32, மொஹிஷின் கான் 2/36, மார்கஸ் ஸ்டோயினிஸ் 1/19) லக்னோ அணி (19.2 ஓவர்களில் 145/6, மார்கஸ் ஸ்டோயினிஸ் 62, கே.எல். ராகுல் 28, தீபக் ஹூடா 18, நிக்கோலஸ் பூரன் 14*, ஹார்திக பாண்ட்யா 2/26) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று லக்னோவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதனால் மும்பை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 4 ரன்) மற்றும் சூர்ய குமார் யாதவ் (6 பந்துகளில் 10 ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த திலக் வர்மா (11 பந்துகளில் 7 ரன்), ஹாதிக் பாண்ட்யா (பூஜ்யம் ரன்), ஆகியோர் இன்று சிறப்பாக விளையாடவில்லை.

மும்பை அணி பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 28 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இதற்குப் பின்னர் நெஹல் வதேரா (41 பந்துகளில் 46 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இரண்டாவது தொடக்க வீரரான இஷான் கிஷனுடன் (36 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார்.

இஷான் கிஷன் ஆட்டமிழந்த பின்னர் டிம் டேவிட் (18 பந்துகளில் 35 ரன்) உடன் இணைந்து விளையாடி அணி ஒரு மதிப்பான ஸ்கோரை அடைய உதவினார்.  இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கட் இழப்பிற்கு 144 ரன் எடுத்திருந்தது. 

145 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான அர்ஷின் குல்கர்னி முதலாவது ஓவரின் நாலாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல் ராகுல் (22 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மூன்றாவதாகக் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (45 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.

அதன் பின்னர் ஆடவந்த தீபக் ஹூடா (18 ரன்) மற்றும் நிக்கோலஸ் பூரன்  (ஆட்டமிழக்காமல் 14 ரன்) இருவரும் கொல்கொத்தா அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 19.2 ஓவரிலேயே 6 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்தபோது மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது. பின்னர் பந்து வீசியபோது ஹார்திக் பாண்ட்யா பந்துவீச்சாளர்களைக் கையாண்டவிதம் சரியில்லை.

பும்ரா போன்ற பந்து வீச்சாளரின் ஓவர்களை முன்னரே முடித்தது தவறான முடிவு. கடைசி இரண்டு ஓவர்களில் ஒன்றை பும்ரா வீசியிருக்க வேண்டும்.

17ஆவது ஓவரை தனது கடைசி ஓவராக பும்ரா வீசினார்; அந்த ஓவரில் அவர் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். இனி மும்பை அணி பிளே ஆஃப் ஸ்டேஜுக்கு முன்னேறுவது சற்று கடினம். 

லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோயினிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காவும் பந்துவீச்சிற்காகவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை சென்னையில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

30.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 981160.694
கொல்கொத்தா963121.096
லக்னோ1064120.094
சென்னை954100.810
ஹைதராபாத்954100.075
டெல்லி115610-0.442
குஜராத்10468-1.113
பஞ்சாப்9366-0.187
மும்பை10376-0.272
பெங்களூரு10376-0.415

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories