
பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பனிரெண்டாம் நாள் – 07.08.2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தடகளம்
கலப்பு மராத்தான் நடை ஓட்டம்: பிரியங்கா கோஸ்வாமி மற்றும் சூரஜ் பன்வார் இருவரும் நடக்கும்போது கால் வளைந்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆண்கள் உயரம் தாண்டுதல் (தகுதிச் சுற்று)
சர்வேஷ் குஷாரே தனது குழுவில் 13ஆக வந்ததால் போட்டியிலிருந்து வெளியேறினார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் (தகுதிச் சுற்று)
அன்னு ராணி தனது குழுவில் 15ஆவதாக வந்ததால் பொட்டியில் இருந்து வெளியேறினார்.
பெண்களுக்கான 100 மீ தடை ஓட்டம் (முதல் சுற்று)
ஜோதி யர்ராஜி தனது குழுவில் எட்டாவதாக வந்ததால் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (தகுதிச் சுற்று)
பிரவீன் சித்திரவேல் மற்றும் அப்துல்லா அபூபக்கர் நாரங்கொலிந்தேவிட இருவரும் இரண்டு முறை டிரிபிள் ஜம்ப் செய்திருக்கிறார்கள். பிரவீன் 16.25 மீட்டர் மற்றும் அப்துல்லா 16.19 மீட்டர் தாண்டியிருக்கிறார்கள். தகுதி பெற 17.10 மீட்டர் தாண்டவேண்டும்.
ஆண்களுக்கான 3,000மீ ஸ்டீபிள்சேஸ் இறுதிச் சுற்று
அவினாஷ் சேபிள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டி நாளை அதிகாலை 1.13 மணிக்கு நடைபெறும்.
கோல்ஃப் மகளிர் தனிநபர் (இறுதிப் போட்டி)
அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் கலந்துகொள்ளும் போட்டி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும்.
டேபிள் டென்னிஸ் மகளிர் அணி (கால்-இறுதி)
இந்தியா (ஸ்ரீஜா அகுலா, மனிகா பத்ரா மற்றும் அர்ச்சனா கிரிஷ் காமத்) எதிராக ஜெர்மனி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தொல்வியுற்றது.
மல்யுத்த பெண்கள் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ (1/8 இறுதிப் போட்டி)
ஆன்டிம் பங்கல் vs சைனெப் யெட்கில் ஆண்டிம் பங்கள் 0-10 என்ற புள்ளிக் கணக்கில் தொல்வியடைந்தார்..
பளு தூக்குதல் பெண்கள் 49 கிலோ (பதக்கம் சுற்று)
சாய்கோம் மீராபாய் சானு போட்டி நடந்துகொண்டிருக்கிறது.