சபரிமலை மேல் சாந்தி தேர்வுக்கு… இன்று நடைதிறப்பு!

1000007858 - 2026
#image_title

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் புதிய மேல் சாந்தி தேர்ந்தெடுப்பு மற்றும் ஐப்பசி விசு பூஜை வழிபாடுகளுக்காக சபரிமலை கோவில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ள நிலையில் புதிய மேல் சாந்தியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆயத்தமாகியுள்ளது.

புதிய மேல் சாந்தியை தேர்ந்தெடுப்பதற்கு பந்தளம் அரண்மனையை சேர்ந்த சிறுவர்கள் ரிஷிகேஷ் வர்மாவும், வைஷ்ணவியும் சபரிமலை – மாளிகப்புரம் மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்க இருமுடிக்கட்டி சபரீசன் சன்னிதிக்கு புறப்பட்டு வந்தடைந்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் அமைந்துள்ளது

இங்கு மூலஸ்தானத்தில் சபரிமலை ஐயப்பன் மற்றொரு சன்னிதானத்தில் மளிகைபுரம் மஞ்ச மாதாவும் அருள்பாலித்து வருகின்றனர்.

இருவருக்கும் பூஜைகள் செய்ய மேல் சாந்திகள் தலைமை பூசாரிகளாக நியமிக்கப்படுகின்றனர் . இவர்கள் பதவிக்காலம் ஒரு ஆண்டு மட்டுமே ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் ஐப்பசி மாதம் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்போது ஐப்பசி மாதப்பிறப்பன்று திருஉளச்சீட்டு குலுக்கல் மூலம் சன்னிதானம் முன் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

இதற்கான ஆயத்த பணிகளை திருவாங்கூர் தேவசம்போர்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவக்கி சபரிமலை மற்றும் மளிகைபுரம் மேல் சாந்திக்கு பதவி மேல் சாந்திக்கு பதவி ஏற்க தகுதியானவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர் .

இவர்களை தேர்வு செய்வதற்காக பந்தள அரண்மனை நிர்வாகமும் திருவாங்கூர் தேவசம்போர்டு கேரள இந்து அறநிலைத்துறையும் சேர்ந்து ஒவ்வொரு விண்ணப்பதாரர்களையும் நேர்முகத் தேர்வு செய்து விண்ணப்பம் செய்தவர்களில் சபரிமலைக்கு 10 பேர்களையும் மளிகை புரம் கோவிலுக்கு 10 பேரையும் தேர்வு செய்தனர்

இந்த 10 பேர் பெயர்கள் பேப்பரில் எழுதி சுருட்டி போட்டு ஒரு வெள்ளி செம்பு பாத்திரத்தில் ஐயப்பன் சன்னதி முன் வைக்கப்படும் இதே போலே மளிகைபுரம் மஞ்ச மாதா கோவிலுக்கும் வைக்கப்படும் .

இந்த திருஉள சீட்டை பந்தள அரண்மனை வழியினர் குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கடும் விரதம் இருந்து வந்து தேர்வு செய்வார்கள் இந்த தேர்வு நாளை நடக்கிறது

இதற்காக சபரிமலை கோயிலுக்கு விரதம் இருந்த இவர்கள் நாளை காலை பூஜைக்குப் பின்பு திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் புதிய மேல் சாந்தியை தேர்ந்தெடுப்பார்கள்

ஒரு சீட்டில் வரும் பெயரில் எடுக்கும் போது மற்றொரு பாத்திரத்தில் மேல் சாந்தி என எழுதப்பட்ட பேப்பரும் வந்தால் அவரை மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.

ஒரு சீட்டில் ஒருவரது பெயர் வரும்போது மற்றொரு பாத்திரத்தில் உள்ள சிட்டி வெள்ளை பேப்பரில் வந்தால் அவர் நிராகரிக்கப்படுவார்.

இது காலம் காலம் தொட்டு நடத்தப்படும் ஒரு சம்பிரதாய நிகழ்வாகும் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மேல் சாந்தி வரும் கார்த்திகை மாதம் முதல் ஐப்பசி மாதம் வரை ஒரு ஆண்டு பதவியில் இருப்பார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories