சபரிமலை மேல் சாந்தி தேர்வுக்கு… இன்று நடைதிறப்பு!

1000007858 - 2026
#image_title

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் புதிய மேல் சாந்தி தேர்ந்தெடுப்பு மற்றும் ஐப்பசி விசு பூஜை வழிபாடுகளுக்காக சபரிமலை கோவில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ள நிலையில் புதிய மேல் சாந்தியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆயத்தமாகியுள்ளது.

புதிய மேல் சாந்தியை தேர்ந்தெடுப்பதற்கு பந்தளம் அரண்மனையை சேர்ந்த சிறுவர்கள் ரிஷிகேஷ் வர்மாவும், வைஷ்ணவியும் சபரிமலை – மாளிகப்புரம் மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்க இருமுடிக்கட்டி சபரீசன் சன்னிதிக்கு புறப்பட்டு வந்தடைந்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் அமைந்துள்ளது

இங்கு மூலஸ்தானத்தில் சபரிமலை ஐயப்பன் மற்றொரு சன்னிதானத்தில் மளிகைபுரம் மஞ்ச மாதாவும் அருள்பாலித்து வருகின்றனர்.

இருவருக்கும் பூஜைகள் செய்ய மேல் சாந்திகள் தலைமை பூசாரிகளாக நியமிக்கப்படுகின்றனர் . இவர்கள் பதவிக்காலம் ஒரு ஆண்டு மட்டுமே ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் ஐப்பசி மாதம் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்போது ஐப்பசி மாதப்பிறப்பன்று திருஉளச்சீட்டு குலுக்கல் மூலம் சன்னிதானம் முன் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

இதற்கான ஆயத்த பணிகளை திருவாங்கூர் தேவசம்போர்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவக்கி சபரிமலை மற்றும் மளிகைபுரம் மேல் சாந்திக்கு பதவி மேல் சாந்திக்கு பதவி ஏற்க தகுதியானவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர் .

இவர்களை தேர்வு செய்வதற்காக பந்தள அரண்மனை நிர்வாகமும் திருவாங்கூர் தேவசம்போர்டு கேரள இந்து அறநிலைத்துறையும் சேர்ந்து ஒவ்வொரு விண்ணப்பதாரர்களையும் நேர்முகத் தேர்வு செய்து விண்ணப்பம் செய்தவர்களில் சபரிமலைக்கு 10 பேர்களையும் மளிகை புரம் கோவிலுக்கு 10 பேரையும் தேர்வு செய்தனர்

இந்த 10 பேர் பெயர்கள் பேப்பரில் எழுதி சுருட்டி போட்டு ஒரு வெள்ளி செம்பு பாத்திரத்தில் ஐயப்பன் சன்னதி முன் வைக்கப்படும் இதே போலே மளிகைபுரம் மஞ்ச மாதா கோவிலுக்கும் வைக்கப்படும் .

இந்த திருஉள சீட்டை பந்தள அரண்மனை வழியினர் குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கடும் விரதம் இருந்து வந்து தேர்வு செய்வார்கள் இந்த தேர்வு நாளை நடக்கிறது

இதற்காக சபரிமலை கோயிலுக்கு விரதம் இருந்த இவர்கள் நாளை காலை பூஜைக்குப் பின்பு திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் புதிய மேல் சாந்தியை தேர்ந்தெடுப்பார்கள்

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

ஒரு சீட்டில் வரும் பெயரில் எடுக்கும் போது மற்றொரு பாத்திரத்தில் மேல் சாந்தி என எழுதப்பட்ட பேப்பரும் வந்தால் அவரை மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.

ஒரு சீட்டில் ஒருவரது பெயர் வரும்போது மற்றொரு பாத்திரத்தில் உள்ள சிட்டி வெள்ளை பேப்பரில் வந்தால் அவர் நிராகரிக்கப்படுவார்.

இது காலம் காலம் தொட்டு நடத்தப்படும் ஒரு சம்பிரதாய நிகழ்வாகும் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மேல் சாந்தி வரும் கார்த்திகை மாதம் முதல் ஐப்பசி மாதம் வரை ஒரு ஆண்டு பதவியில் இருப்பார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories