
பொருத்தமான அஞ்சலி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியின் மனைவி இந்திய இராணுவ பதிலடியை தனது மறைந்த கணவருக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி என்று பாராட்டியுள்ளார். என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது, மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், எங்கள் நம்பிக்கையை அவர் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவர் நிம்மதியாக இருப்பார்,” என்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறினார்
இந்திய ராணுவத்தின் துல்லியமான பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினர், நீதிக்கான வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆயுதப் படைகளுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான சுபம் திவேதி, தனது மனைவி மற்றும் மைத்துனியுடன் பஹல்காமிற்குச் சென்றிருந்தபோது, ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளான சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர் தலையில் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்நிலையில் இன்று பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அளிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அவரது மனைவி அஷான்யா திவேதி பேசினார். “இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைவருக்கும், குறிப்பாக ஆயுதப் படைகளில் உள்ள எங்கள் பணியாளர்களுக்கும், குறிப்பாக நடவடிக்கையை தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
“‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர், கணவர்களை இழந்த எங்களுடன் அவர்கள் நிற்பதை தெளிவாகக் காட்டுகிறது. பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அது ஒழிக்கப்படும் என பிரதமர் என்ன சொன்னாரோ, அதை அவர் நிரூபித்தார். ” என்றார்.
மேலும்,, “பயங்கரவாதிகள் எங்களை பாதிக்கப் படக் கூடியவர்களாக மாற்றுவதற்காக எங்கள் கணவர்களைக் கொன்றனர், ஆனால் நாங்கள் போராடுவோம். பிரதமர் மோடி அவர் சொன்னது போல் பழிவாங்கினார், இந்த பயங்கரவாதிகள் முடிவுக்கு வருவார்கள்” என்று கூறினார்.
ஷுபாமின் சகோதரரும் இந்த விரைவான நடவடிக்கையை வரவேற்றார். “நாடு முழுமையும் மோடி ஜிக்கும் நமது ஆயுதப் படைகளுக்கும் நன்றி தெரிவிக்கிறது. யாராவது இந்த வழியில் நம் நாட்டை சவால் செய்தால், நாம் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் நமது காயங்களுக்கு மருந்தாக இருந்தது,” என்று அவர் கூறினார்.
“அந்தத் தாக்குதலின் போது உயிர் இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் உண்மையிலேயே அஞ்சலி செலுத்துகிறது.” என்றார்.
ஷுபாமின் தந்தையும் அரசாங்கத்தின் உறுதியைப் பாராட்டினார். “அதிகாலை 2 மணியளவில் எனக்கு தகவல் கிடைத்தது. இந்திய அரசாங்கமும் ஆயுதப்படைகளும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன. நாட்டுக்காகவும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதற்காகவும் பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி பயங்கரவாதத்தை அழித்துவிட்டார். நான் அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்.”
புதன்கிழமை அதிகாலை தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள ஒன்பது உயர் மட்ட பயங்கரவாத உள்கட்டமைப்புத் தளங்களை குறிவைத்தது. இந்திய ராணுவம் தாக்குதல்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற துல்லியத்துடன் நடத்தப்பட்டதாகவும், பாகிஸ்தானில் உள்ள எந்த பொதுமக்கள் அல்லது இராணுவ நிலைகளையும் பாதிக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தியது.

பகல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளாவின் ராமச்சந்திரனின் மகள் ஆரத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்ததற்காக இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார். தனது தாயின் சிந்தூரைக் (குங்குமத்தைக்) கைப்பற்றியதற்கு பழிவாங்கும் விதமாக, இந்த நடவடிக்கைக்கு #OperationSindoor என்ற சரியான பெயரை வழங்கியதற்காக படைகளைப் பாராட்டினார்.





