தத்கால் ரயில் முன்பதிவுக்கு இனி இ-ஆதார் கட்டாயம்!

railway news - 2026
#image_title

தத்கால் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளுக்கு இனி இ ஆதார் கட்டாயமாகிறது. இதனை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூகத் தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். முன்னதாக போலிகளைக் கண்டறிந்து களை எடுக்கும் வேலையை ஐஆர்சிடிசி தளத்தில் துவங்கியுள்ளதாக தெரிவித்த நிர்வாகம் இரண்டரை கோடி போலி பயனர் ஐடிகளை நீக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து விடுவதாகவும், இடைத்தரகர்கள் அதிகளவில் டிக்கெட் முன்பதிவு செய்வதாகவும் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து, இத்தகைய பிரச்சினைகளை தீர்க்க ரயில்வே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தத்கால் முன்பதிவு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அவர் தனது சமூக தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள குறிப்பில், தத்கால் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது என்று தெரிவித்துள்ளார். 

அதாவது, ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பது அவரது அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தப் புதிய நடவடிக்கை மூலம் உண்மையான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

இதன் மூலம், ஆதார் எண் இணைத்து வெரிபிகேஷன் – சரிபார்ப்பு செய்து வைத்திருக்கும்  பயனர் கணக்கில் இருந்து மட்டுமே தத்கால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். மேலும், ஆதார் மூலம் வரும் ஓடிபி என்ணை பதிவு செய்த பிறகே டிக்கெட் புக் செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. கவுன்ட்டர்களில் தத்கால் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த மாத இறுதியில் இந்தப் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படக்கூடும். 

ஏற்கனவே ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் பயனர் கணக்குகளுக்கு ஆதார் எண் சரிபார்ப்பு நடைமுறை உள்ளது.  அதன் மூலம் டிக்கெட் பதிவு செய்யப்பட்டும்  வருகிறது.  எனினும் அது கட்டாயமாக்கப்படுவது தற்போது உண்மையான பயனர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் வசதியாக இருக்கக் கூடும்.  

சாதாரண டிக்கெட் முன்பதிவு என்பது, ரயில்களில் 60 நாட்களுக்கு முன்னதாகவே செய்ய முடியும். மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 20 சதவீதம் தத்கால் முன்பதிவுக்கு ஒதுக்கப்படுகிறது. ஏசி வகுப்பு தத்கால் டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கும், படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளுக்கான டிக்கெட் 11 மணிக்கு முன்பதிவு செய்ய முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories