ராகுலே உதாரணம்! தேசிய அடையாளத்தைத் தொலைத்த காங்கிரஸ்!

1854358 rahulgandhi1 - 2026

இந்திய ராணுவத்தை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராணுவத்தை அவமதிப்பதெல்லாம் கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்று கறாராகக் கூறிவிட்டது.

இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நிலவிய மோதல் குறித்து கடந்த 2022ஆம் அண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி பேசியிருந்தார். அவரது பேச்சில் இந்திய ராணுவத்தை விமர்சிப்பதைப் போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தன. 

இதற்கு எதிராக ‘எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின்'(BRO) இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவாஸ்தவா புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாரதப் பிரதமர் மோடி மீதான வெறுப்பில் – நம் நாட்டின் படைகளின் வெற்றியைக் கொண்டாடக்கூட வேண்டாம்; குறைந்த பட்சம் தூற்றாமல் வாயை மூடிக்கொண்டாவது இருந்தால், தன் மீதான மதிப்பு கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதைக் கூட அறியாத ராகுல், உண்மையில் எதிர்க்கட்சித் தலைவராய் இருக்க லாயக்கில்லாதவர்தான்! 

ஆபரேஷன் சிந்தூர் என்பதை பாஜக., தனது அரசியல் லாபத்துக்காக எடுத்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டைக் கூறும் முன், இதே போன்ற சூழ்நிலைகள் நாட்டில் நிலவியபோது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது என்பது ராகுலுக்கு நினைவில்லையா அல்லது அது தங்கள் கட்சியின் தோல்வி என்பதைத்தான் இப்போது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறாரா? 

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

‘நரேந்தர் சர்ண்டர்’ என்று ராகுல் கூறும் எதுகை மோனையை ரசிக்க ஒரு சில மர்ம மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் ராகுலையும் காங்கிரஸ் கட்சியையும் அருவெறுப்புடன் பார்க்கிறதே!  ஒரு சில மர்ம மனிதர்களை குஷிப் படுத்துவதற்காக நாட்டின் பெரும்பாலான மக்களின் கோபத்தை அல்லவா காங்கிரஸ் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதானே இப்போது காங்கிரஸை விட்டு பல தலைவர்கள் விலகிக் கொண்டிருப்பது?!

பாகிஸ்தானுக்கு போரில் நேரடியாக ட்ரோன்களை இயக்கி, போரில் பங்கேற்ற துருக்கி நாட்டில், எதற்காக காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறந்து வைத்திருக்கிறது  என்கிற கேள்விக்கு பதில் அளிக்க துப்பில்லாமல் போனது ராகுல் காந்திக்கு! போரில் உதவிய சீனாவிடம் காங்கிரஸூக்கு என்ன தொடர்பு? எதற்காக ரகசியமாய் ஒப்பந்தம் போட வேண்டும்? – என்றெல்லாம் எழுப்பப் படும் கேள்விகளுக்கு ராகுலாலோ, காங்கிரஸின் தலைவர்களாலோ எந்த பதிலும் தர முடியாமல் போயிருக்கிறதே! 

இந்நாட்களில் சொல்லப் போனால் காங்கிரஸ்  தன் தேசியக் கட்சி என்ற அடையாளத்தை இழந்துவிட்டது என்பது தான் இந்திய அரசியல் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும்!

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories