December 6, 2025, 3:22 AM
24.9 C
Chennai

இரட்டை இலை மீட்புக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: தினகரன் ஆஜர்

ttv dinakaran - 2025

புது தில்லி: இரட்டை இலை மீட்புக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதுதொடர்பான வழக்கில் இன்று தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

ஆர்.கே.நகரில் முதல்முறையாக இடைத்தேர்தல் நடைபெற்ற போது, அதிமுக.,வின் அதிகார பூர்வ சின்னமான இரட்டை இலைக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரினர். இதனால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன் பின்னர் தேர்தலும் ரத்தானது.

இந்த இடைப்பட்ட காலத்தில், இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு, பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா ஏஜெண்டுகள் சிலர்  கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கின் விசாரணை, தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர், தினகரனிடம் குரல் பரிசோதனை நடத்த தில்லி போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு தினகரன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே, தினகரன் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி வீடியோவை தில்லி போலீசார் பெற்று குரல் பரிசோதனை நடத்தினர். இதனிடையே இந்த வழக்கு தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இருந்து தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. தினகரனுக்கு ஏற்கனவே நீதிமன்றம் நேரில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி இருந்ததால் இன்று தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 4ம் தேதி வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories