இரட்டை இலை மீட்புக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: தினகரன் ஆஜர்

ttv dinakaran - 2026

புது தில்லி: இரட்டை இலை மீட்புக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதுதொடர்பான வழக்கில் இன்று தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

ஆர்.கே.நகரில் முதல்முறையாக இடைத்தேர்தல் நடைபெற்ற போது, அதிமுக.,வின் அதிகார பூர்வ சின்னமான இரட்டை இலைக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரினர். இதனால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன் பின்னர் தேர்தலும் ரத்தானது.

இந்த இடைப்பட்ட காலத்தில், இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு, பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா ஏஜெண்டுகள் சிலர்  கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கின் விசாரணை, தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர், தினகரனிடம் குரல் பரிசோதனை நடத்த தில்லி போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு தினகரன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே, தினகரன் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி வீடியோவை தில்லி போலீசார் பெற்று குரல் பரிசோதனை நடத்தினர். இதனிடையே இந்த வழக்கு தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இருந்து தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. தினகரனுக்கு ஏற்கனவே நீதிமன்றம் நேரில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி இருந்ததால் இன்று தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 4ம் தேதி வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories