தனி தபால் நிலையம் வைத்திருக்கும் சுவாமி ஐயப்பன்!

Published:

1001227673 - 2026

தனக்கென தனி தபால் நிலையம் வைத்திருக்கிறார் சபரிமலை ஐயப்பன்

ஐயப்பன் சாமிக்கு சபரிமலா தேவக்ஷேத்ரத்தில் , ஒரு தபால் நிலையம் உண்டு.

நம்முடைய பாரததேஸத்தில்
இருவருக்கும் மட்டுமே பின்கோடு கொண்ட தபால்நிலையங்கள் உள்ளது.

ஒருவர் நமது பாரததேஸத்தின் இராஷ்ட்ரபதிக்கு (ஜனாதிபதி) க்கு உண்டு.

அடுத்ததாக சபரிமலையில் எழுந்திருள்ள ஐயப்பசாமிக்குதான் பின்கோடு கூடிய தபால் நிலையம் உள்ளது.*

இந்த தபால்நிலையத்தின் பின்கோடு – 689713 ஆகும். இந்த தபால் நிலையம் மூன்றுமாதம் மட்டுமே நடக்கும். அதாவது விருச்சிக மாதம் என்கிற கார்த்திகை மாதம் முதல் மகர மாதம் என்கிற தை மாதம் முழுவதும் நடக்கும்.
அதன் பிறகு அடுத்த வருடம் தான்.

சன்னிதானத்தின் பதினெட்டு படியும், ஐயப்பன் விக்கிரகம் கூடிய தபால் முத்திரை உண்டு. பாரதத்தில் வேறெங்கும் இதுபோல் இல்லை!

இந்த தபால் முத்திரை தாங்கிய கடிதங்கள் பக்தஜனகோடிகள் தங்களுடைய வீடுகளுக்கு தாங்கள் பத்திரமாக சபரிமலையில் சேர்ந்துள்ளோம், என்றும்.
அதேபோல் முன்பு டெலிகிராம் செய்யவும் வசதியிருந்தது.
லேண்ட்லைன், மொபைல் போன்றவைகள் இல்லாதகாலத்தில் இந்த தபால் நிலையம் தொடங்கப்பட்டதால் இன்றளவும் செயல்படுகின்றது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

மேலும் பல பேர்கள் தங்களின் வீட்டில் விவாஹ சுபசடங்குகள் நடக்கும்போது முதலில் ஐய்யப்பனுக்கு முதல் பத்திரிகை அனுப்புவார்கள்.

சிலபேர்கள் நேரிட்டு வரமுடியாதவர்கள் தங்களுடைய துரிதங்களை ஐயப்பனிடம் பங்குவைக்கவும் கடிதங்கள் அனுப்புவார்கள்.
அவ்வளவு ஏன்? சில ஸ்த்ரீமார்கள் காதல் கடிதங்களையும் பந்தளத்தோமனுக்கு அனுப்புவார்கள்.

சில பேர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதால் பணத்தை மணியார்டரும் செய்வார்கள்.

இவையெல்லாம் முதலில் தேவக்ஷேத்ரத்திலுள்ள மணிகண்டனிடம் சமர்ப்பித்து விட்டு, அதன் பிறகு தபால் நிலையம் எக்ஸ்க்யுட்டி அதிகாரியிடம் சேர்க்கப்படுகின்றது.

மகர மாதம் காந்தமலை ஜோதி முடிந்ததும். தபால் நிலையம் மூடப்பட்டதும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தபால் முத்திரை, தபால் நிலையம் சூப்பிரண்ட் கார்யாலத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் சேர்க்கப் படுகின்றது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img