பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்!

edappadi pazanisamy - 2026

சென்னை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தற்போதைய தலையாய பிரச்னையான காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை கூடிய சட்டப் பேரவை சிறப்பு அமர்வில் காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி, அத்துடன் தீர்மான நகலையும் இணைத்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த பிப்.16 அன்று, உச்ச நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்குமாறு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார் முதல்வர்.

உச்சநீதிமன்றம் நிர்ணயித்த ஆறு வார காலக் கெடுவில் 4 வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கின்றனர் என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுக்களை அமைத்து அவை முழு வீச்சுடன் இயங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய நீராதாரத்துறை, நதிகள் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றுக்கு பிரதமர் அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமராகிய தாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அதில் கூறியுள்ளார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories