January 20, 2025, 6:20 PM
26.2 C
Chennai

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்!

சென்னை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தற்போதைய தலையாய பிரச்னையான காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை கூடிய சட்டப் பேரவை சிறப்பு அமர்வில் காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி, அத்துடன் தீர்மான நகலையும் இணைத்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த பிப்.16 அன்று, உச்ச நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்குமாறு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார் முதல்வர்.

உச்சநீதிமன்றம் நிர்ணயித்த ஆறு வார காலக் கெடுவில் 4 வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கின்றனர் என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுக்களை அமைத்து அவை முழு வீச்சுடன் இயங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய நீராதாரத்துறை, நதிகள் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றுக்கு பிரதமர் அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமராகிய தாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அதில் கூறியுள்ளார்.

ALSO READ:  தென்காசியில் பால வேலைக்காக முக்கிய ரயில்வே கேட் மூடல்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...