பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்!

edappadi pazanisamy - 2026

சென்னை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தற்போதைய தலையாய பிரச்னையான காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை கூடிய சட்டப் பேரவை சிறப்பு அமர்வில் காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி, அத்துடன் தீர்மான நகலையும் இணைத்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த பிப்.16 அன்று, உச்ச நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்குமாறு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார் முதல்வர்.

உச்சநீதிமன்றம் நிர்ணயித்த ஆறு வார காலக் கெடுவில் 4 வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கின்றனர் என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுக்களை அமைத்து அவை முழு வீச்சுடன் இயங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய நீராதாரத்துறை, நதிகள் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றுக்கு பிரதமர் அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமராகிய தாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அதில் கூறியுள்ளார்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories