பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்!

edappadi pazanisamy - 2026

சென்னை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தற்போதைய தலையாய பிரச்னையான காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை கூடிய சட்டப் பேரவை சிறப்பு அமர்வில் காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி, அத்துடன் தீர்மான நகலையும் இணைத்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த பிப்.16 அன்று, உச்ச நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்குமாறு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார் முதல்வர்.

உச்சநீதிமன்றம் நிர்ணயித்த ஆறு வார காலக் கெடுவில் 4 வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கின்றனர் என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுக்களை அமைத்து அவை முழு வீச்சுடன் இயங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய நீராதாரத்துறை, நதிகள் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றுக்கு பிரதமர் அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமராகிய தாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories