எங்கள் கட்சிப் போல் இருக்கிறது: தினகரன் புதிய கட்சிக் கொடிக்கு தடை கோரி அதிமுக., மனு

dinakaran flag e1521094084433 - 2026

சென்னை: டிடிவி தினகரன் வியாழக்கிழமை நேற்று துவக்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்து, அதிமுக., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இதற்கு நீதிமன்றம், இதனை முறையாக சிவில் வழக்காக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.

அதிமுக.,வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செலம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், மதுரையில் டி.டி.வி. தினகரன் அறிமுகப்படுத்திய கொடி அதிமுக., கொடியைப் போன்றே இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக., கொடியில் தலா 50 சதவீதம் கருப்பு – சிவப்பு வண்ணங்களும் நடுவில் வெள்ளை நிறத்தில் அண்ணா படமும் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியில் தலா 25 சதவீதம் கருப்பு – சிவப்பு வண்ணங்களும் நடுவில் 50 சதவீதம் வெள்ளையும் இருப்பதாக அவர் கூறினார். எனவே கொடியின் வடிவமைப்பில் மாறுபாடுகள் இருப்பதாக அவர் கூறினார்.

ஏற்கெனவே, கருப்பு, சிவப்பு வண்ணத்தை தி.மு.க., மறுமலர்ச்சி தி.மு.க., தி.க. உள்ளிட்ட 7 கட்சிகள் பயன்படுத்துவதாகவும் எனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி, அதிமுக., கொடியைப் போல் இருப்பதாகக் கூறுவது தவறு எனவும் கூறினார். இருப்பினும், தங்கள் கருத்துக்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய இருப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கை சிவில் வழக்காக வரும் செவ்வாய்க்கிழமை ஏற்பதாகவும், அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories