அதிமுக., மீது பழி போடும் சமாஜ்வாதி; நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நடத்தவிடாமல் செய்கிறதாம்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

cauvery issue mps anbumani - 2026

புது தில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்தி நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அதிமுக., உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் பாமக., எம்பி., அன்புமணியும் திமுக., எம்.பி.க்களும் கூட கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகியவை ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்ற கோரிககையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளன. ஆனால், அவையை தொடர்ந்து நடத்த விடாமல் அதிமுக., உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், நிரவ் மோடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், அவையில் கூச்சல் குழப்பம் ஆரவாரம் நீடிப்பதால், நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப் படாமல் நீட்டிக்கப் பட்டு வருகிறது. இதற்கு அதிமுக.,வை பாஜக., தூண்டிவிட்டு, அவையில் கூச்சல் குழப்பத்தை நீடிக்கச் செய்வதே காரணம் என்று அதிமுக.,வின் மீது பழியைப் போட்டு, தமிழக எம்.பி.க்களின் காவிரி குறித்த முழக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது சமாஜ்வாதி கட்சி.

அக்கட்சியின் எம்பி., ராம்கோபால் யாதவ், எதிர்க் கட்சிகள் விவாதத்துக்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் அதிமுக.,தான் மத்திய அரசின் தூண்டுதலில் அவையை நடத்தவிடாமல் செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

 

Related articles

Recent articles

spot_img