தீர்ப்பில் கூறப்பட்டபடி மேலாண்மை வாரியம் ஒன்றையே ஏற்போம்: தமிழக அரசு உறுதி

assembly - 2026

சென்னை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டபடி, மேலாண்மை வாரியம் ஒன்றைத் தவிர, வேறு எந்த செயல் திட்டத்தையும் ஏற்க இயலாது என மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி அளித்த காவிரி மீதான தனது இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியது. இதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், மத்திய அரசு மாற்று வழிகளை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்றும், காவிரி மேற்பார்வை வாரியம் எல்லாம் தீர்வுக்கு ஆகாது என்றும் கூறி வருகின்றன.

இதையடுத்து தில்லி சென்ற தமிழக பொதுப் பணித்துறை செயலர் பிரபாகர், தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்தனர். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் தவிர வேறு எந்த செயல் திட்டத்தையும் ஏற்க முடியாது என எழுத்துப்பூர்வமாக தமிழக அரசு அதிகாரிகள் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று இது தொடர்பாக, காவிரி வழக்கில் தமிழகத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சேகர்நாப்தேவை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது, நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மத்திய அரசின் மீது தொடரலாம் என்று யோசனை கூறப்பட்டதாம். அப்படியே செய்யப் போவதாக தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இந்நிலையில் நேற்று கர்நாடகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் தேதிக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தேர்தல் ஆணையர் அறிவித்தார். எனவே, உச்ச நீதிமன்ற கெடு முடிவடைவதால் காவிரிப் பிரச்னையில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories