3 மாத அவகாசம் கேட்கும் மத்திய அரசு! அவமதிப்பு வழக்கு போட்ட மாநில அரசு!

supreme court of india - 2026

காவிரி விவகாரத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அடுத்த கட்ட மோதல் இன்று வெடித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வகை செய்யும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசு, குறிப்பிட்ட காலக் கெடுவையும் மீறி, கால தாமதம் செய்தது.

இதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, மாநில அரசு ஏதாவது ஒரு வகையில் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, உண்ணாவிரதப் போராட்டம், ராஜினாமா மிரட்டல் என அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளைக் காட்டி வந்த மாநில அரசு, இப்போது சட்ட ரீதியான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

இதை அடுத்து, மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது மாநில அரசு.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு. கர்நாடக தேர்தலை காரணம் காட்டி, காவிரி தீர்ப்பை அமல்படுத்த மேலும் 3 மாத காலத்துக்கு அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான 16.2.2018இல் இருந்து 3 மாத காலத்துக்கு இந்த அவகாசத்தைக் கோரி மனுதாக்கல் செய்தது மத்திய அரசு. முன்னதாக, 16.2.2014 தீர்ப்பு நாளில் இருந்து 6 வார கால அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்.

இதனிடையே, கர்நாடகத் தேர்தல் வந்துள்ளதாலும், மாநில அரசின் அரசியல் நடவடிக்கைகள் காவிரியை வைத்து அமைந்துள்ளதாலும், மேலும் அவகாசம் அளிக்க மத்திய அரசு விரும்பியதாகவும், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற சொல், மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்று கர்நாடக அரசின் சார்பில் வலுவாகத் தெரிவித்ததாலும், இதனைக் குறித்து விளக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடமே தங்கள் தீர்ப்பில் தெளிவு படுத்தக் கோரி மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

இவ்வகையில், தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரியுள்ள மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன என விளக்கம் அளிக்குமாறும் கேட்டுள்ளது.

மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்கு தீர்ப்பாயம் அளித்ததைத் தவிர கூடுதல் கடமைகள் இருக்கலாமா? தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா? – என்று கேள்வி எழுப்பியுள்ளது மத்திய அரசு.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

#CauveryManagementBoard #CauveryIssues #KarnatakaElection #CauveryIssue #SupremeCourt

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories