3 மாத அவகாசம் கேட்கும் மத்திய அரசு! அவமதிப்பு வழக்கு போட்ட மாநில அரசு!

supreme court of india - 2026

காவிரி விவகாரத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அடுத்த கட்ட மோதல் இன்று வெடித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வகை செய்யும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசு, குறிப்பிட்ட காலக் கெடுவையும் மீறி, கால தாமதம் செய்தது.

இதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, மாநில அரசு ஏதாவது ஒரு வகையில் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, உண்ணாவிரதப் போராட்டம், ராஜினாமா மிரட்டல் என அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளைக் காட்டி வந்த மாநில அரசு, இப்போது சட்ட ரீதியான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

இதை அடுத்து, மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது மாநில அரசு.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு. கர்நாடக தேர்தலை காரணம் காட்டி, காவிரி தீர்ப்பை அமல்படுத்த மேலும் 3 மாத காலத்துக்கு அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான 16.2.2018இல் இருந்து 3 மாத காலத்துக்கு இந்த அவகாசத்தைக் கோரி மனுதாக்கல் செய்தது மத்திய அரசு. முன்னதாக, 16.2.2014 தீர்ப்பு நாளில் இருந்து 6 வார கால அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்.

இதனிடையே, கர்நாடகத் தேர்தல் வந்துள்ளதாலும், மாநில அரசின் அரசியல் நடவடிக்கைகள் காவிரியை வைத்து அமைந்துள்ளதாலும், மேலும் அவகாசம் அளிக்க மத்திய அரசு விரும்பியதாகவும், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற சொல், மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்று கர்நாடக அரசின் சார்பில் வலுவாகத் தெரிவித்ததாலும், இதனைக் குறித்து விளக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடமே தங்கள் தீர்ப்பில் தெளிவு படுத்தக் கோரி மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

இவ்வகையில், தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரியுள்ள மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன என விளக்கம் அளிக்குமாறும் கேட்டுள்ளது.

மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்கு தீர்ப்பாயம் அளித்ததைத் தவிர கூடுதல் கடமைகள் இருக்கலாமா? தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா? – என்று கேள்வி எழுப்பியுள்ளது மத்திய அரசு.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

#CauveryManagementBoard #CauveryIssues #KarnatakaElection #CauveryIssue #SupremeCourt

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories