பாஜக.,வில் சேருமாறு அழைத்த அமித் ஷா; அதிர்ச்சி அளித்த மைசூர் மன்னர் வாரிசு!

amit sha mysore palace2 - 2026

பாஜக.,வில் சேருமாறு அக்கட்சித் தலைவர் அமித் ஷா விடுத்த அழைப்பை மகாராஜா குடும்பம் நிராகரித்ததில் கர்நாடக பாஜக தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, நேற்று மைசூரு மகாராணி பிரமோத‌ தேவியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர்களிடம் தங்களுக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், பாஜகவில் சேருமாறு அமித் ஷா விடுத்த அழைப்பை மைசூரு மகாராஜா குடும்பம் நிராகரித்து விட்டது. இது உடன் சென்ற எடியூரப்பா உள்ளிட்ட மாநில பாஜக., தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

amit sha mysore - 2026கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா. இவர் நேற்று மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கூட்டங்களில் பேசினார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூருவில் காங்கிரஸை தோல்வியடையச் செய்ய வேண்டும் என பாஜக.,வினருக்கு கட்டளையிட்டுள்ளார் அமித் ஷா. அதனால் மைசூரு நகரில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்கள் பாஜக.,வினர்.

அதன் காரணத்தால், மைசூரு நகரில் செல்வாக்கு பெற்ற மன்னர் குடும்பத்தைக் கண்டு, பாஜக.,வில் மன்னர் வாரிசுகளைச் சேர அழைப்பு விடுக்கலாம் என்று கூறினர். மேலும், மைசூரு பாஜக நிர்வாகிகள் கூறியபடி அட்டூர்மடம், கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஆகியவற்றுக்கு அமித் ஷா நேரில் சென்று ஆசி பெற்றார். பின்னர் மைசூரு அரண்மனைக்குச் சென்ற அமித் ஷா ம‌றைந்த மகாராஜா ஸ்ரீகண்ட நரசிம்மதத்த உடையாரின் மனைவியும் மகாராணியுமான பிரமோத தேவியையும், இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையாரையும் சந்தித்தார்.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

amit sha mysore palace - 2026

அப்போது அரசியல் ரீதியாக பாஜக.,வுக்கு வருமாறு மன்னர் வாரிசுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமித் ஷா. மைசூருவில் காங்கிரஸை வீழ்த்த மைசூரு மகாராஜா குடும்பத்தின் ஆதரவு தேவை என்றும், மகாராஜா குடும்பம் பாஜகவில் சேர்ந்தால் உரிய மரியாதையும் பதவியும் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றும் பேசப்பட்டுள்ளது.

தொடர்ந்து தங்களது கோரிக்கையை ஏற்று பாஜக.,வில் இணைந்தால் குடும்ப உறுப்பினருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும், ம‌றைந்த மகாராஜா ஸ்ரீகண்ட நரசிம்ம தத்த உடையார் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்ததைப் போல அவரது மனைவி அல்லது வாரிசும் இருக்கலாம் என்றும், இந்த தேர்தலில் பாஜக.,வை ஆதரிக்க வேண்டும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாம்.

wodaiyar family child amit sha - 2026

ஆனால், மகாராணி பிரமோத தேவி, தனது கணவர் காங்கிரஸில் நீண்ட காலம் இருந்தவர் என்பதாலும், உடனடியாக பாஜக.,வில் சேருவது குறித்து உறுதியாகக் கூற முடியாது என்றும், ஆனால் தங்களின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

குடும்ப வாரிசான இளவரசர் யதுவீர் கிருஷ்ண தத்த சாம்ராஜ உடையாரும் தாம் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்று கூறிவிட்டாராம். இதனால் எதிர்ப்பார்த்துப் போன பாஜக.,வினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories