சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கேஜ்ரிவால் சந்திப்பு; மூன்றாம் அணிக்கான முன்னேற்பாடுகள் தயார்!

chandrababu kejriwal - 2026

புது தில்லி: மீண்டும் மூன்றாம் அணி என்ற தளத்தை வரும் 2019 பொதுத் தேர்தலில் ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அதற்காக பல்வேறு மாநிலக் கட்சி அரசியல்வாதிகளை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை இன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்துப் பேசினார்.

வரும் 2019 பொதுத் தேர்தலில், மூன்றாம் அணியின் மூலம் அதிகாரம் பெறும் முயற்சியை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன்னோட்டமாக, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்ற காயை வைத்து அரசியலை நகர்த்தி வருகிறார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசால் ஏற்கப்படாத நிலையில், பாஜக.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது. தொடர்ந்து இரு கட்சிகளிடையே வார்த்தை மோதல்கள் வெடித்தன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தே.ஜ.கூட்டணி அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.

பா.ஜ.க கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகிய நிலையில், முதல் முதலாக அதன் தலைவரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தில்லி சென்றார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர் எதிர்க் கட்சித் தலைவர்கள் வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோரை சந்தித்துப் பேசினார். அது மட்டுமல்லாது தே.ஜ.கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் ஹர்சிம்ரத் கவுரையும் சந்தித்து பேசினார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதிப் பந்தோபாத்யாய, அதிமுக., எம்.பி., டாக்டர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பாஜக., கூட்டணியில் உள்ள அப்ணாதளம் கட்சித் தலைவர் அனுப்ரியா படேல், சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புகளின்போது, மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது. அவருடைய இன்றைய சந்திப்புப் பட்டியலில் முதலில் தில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இடம்பிடித்தார். அவரை இன்று காலை சந்திரபாபு நாயுடு தில்லி ஆந்திர பவனில் சந்தித்துப் பேசினார்.

தங்கள் கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கும்படி சந்திரபாபு, கேஜ்ரிவாலிடம் கேட்டுக் கொண்டார். கடந்த வாரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். காங்கிரஸ், பாஜக., இல்லாத மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் முதல்படியாகவும் அவரது நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories