புதுதில்லி: தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மகாத்மா காந்திக்கும் பல்வேறு தியாகிகளுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். “தேச தந்தைக்கு எனது அஞ்சலி: தியாகிகள் தினத்தன்று நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் வீரமும் தைரியமும் நம்மை எப்போதும் ஊக்குவிக்கும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

