December 5, 2025, 4:32 PM
27.9 C
Chennai

மே 3ஆம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல் திட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

supreme court of india - 2025

புது தில்லி: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-ஆம் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில், ஆறு வார காலத்துக்குள் குறிப்பிட்ட திட்டத்தை அமலாக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டதால், அது, காவிரி மேலாண்மை வாரியம் தான் என தமிழக அரசு சொல்லி வந்தது. ஆனால் கர்நாடகாவும், கேரளாவும், அது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல, ஸ்கீம் அதாவது ஒரு திட்டம் என்றுதான் கூறியுள்ளது. எனவே அது மேலாண்மை வாரியத்தைக் குறிப்பிடவில்லை. இதையும் மீறி மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று கூறின. இதனால் மத்திய நீர்வளத்துறை குழம்பிப் போனது.

இதனிடையே கேரளம் இது குறித்து உச்ச நீதிமன்றமே விளக்கம் தரட்டும் என்று சீராய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய அரசும் வேறு வழியின்றி, ஸ்கீம் என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விளக்கவும், மேற்கொண்டு செயல்பட வேண்டிய நடமுறைகள் குறித்து விவாதிக்கவுமே, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டங்களுக்கு 5 வார கால அவகாசம் ஓடிய நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கால அவகாசம் நிறைவடைந்தது. இதனால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கால அவகாசம், மார்ச் 29ம் தேதி நிறைவடைந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு செயல்படவில்லை என்று மார்ச் 31ம் தேதி மத்திய கேபினட் செயலாளர் மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

தொடர்ந்து புதுச்சேரியும் வழக்கு தொடர, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த ‘ஸ்கீம்’ என்பதன் விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகியவற்றை திங்கள் கிழமை இன்று விசாரிப்பதாகக் கூறியது உச்ச நீதிமன்றம்.

அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது மே 3ஆம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்; இரு மாநிலங்களும் பாதிக்கப் படாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறி வழக்கை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி, மே.3ம் தேதிக்குள் வரைவு செயல்திட்ட அறிக்கை தயாரித்தளிக்க வேண்டும் என்று க்கூறியதற்கு, மத்திய அரசு எந்த மறுப்பையோ, ஆட்சேபணையையோ தெரிவிக்கவில்லை.

முன்னதாக, தங்களுக்கு ஆறுவார கால அவகாசம் போதாது என்றும், கூட்டங்கள் நடத்தி மாநில அரசுகளின் கருத்தைக் கேட்கவே 5 வாரங்கள் ஓடி விட்டதாகவும், எனவே தீர்ப்பு வெளியான பிப்.16ஆம் தேதியில் இருந்து தங்களுக்கு 3 மாத கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories