முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் நீரவ் மோடியை கைது செய்ய சீனா உதவும்!

nirav modi - 2026

நீரவ் மோடியை இந்தியா கைது செய்ய ஹாங்காங் நடவடிக்கை மேற்கொள்வதற்கு சீனா உதவும் என்றும், இந்திய அரசு முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் சட்ட விதிகளுக்குட்பட்டு நீரவ் மோடியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு முறைகேடு செய்து, வெளிநாட்டுக்குத் தப்பியுள்ளார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி. அவருடன் சேர்ந்து, இந்தப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்ட அவரது உறவினர்களையும் கைது செய்ய, சிபிஐ வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

மத்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நீரவ் மோடி, தற்போது ஹாங்காங்கில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், `சீனாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஹாங்காங் அரசிடம் நீரவ் மோடியை கைது செய்ய கோரிக்கையை வைத்துள்ளோம்’ என்றார்.

இதன் பின்னணியில் மார்ச் 23ஆம் தேதி இந்தியாவின் சார்பில் ஹாங்காங் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஹாங்காங் அரசுடன் இந்திய அரசு ஏற்கெனவே குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. எனினும் இதுதொடர்பாக ஹாங்காங் சீனாவிடம் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
இந்நிலையில், நீரவ் மோடியை ஹாங்காங் கைது செய்ய சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறைப்படி கோரிக்கை வைத்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த ந்டவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று கூறியுள்ள சீனா, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஹாங்காங் நடவடிக்கை எடுக்கலாம் என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories