குஜராத் பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தை முடக்கிய பாகிஸ்தான் நாசகாரர்கள்!

Published:

குஜராத் மாநில பள்ளி கல்வித்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஊடுருவல் காரர்கள் திடீரென முடக்கினர். அதில் பிரதமர் மோடியை பற்றி அவதூறான வாசகங்களையும் அவர்கள் பதிவேற்றம் செய்தனர். குஜராத் மாநில கல்வித்துறையில் வித்யாசாயக் குஜராத் என்னும் வலைதளத்தை பாகிஸ்தான் இணையதள ஊடுருவல் காரர்கள் முடக்கினர். ஆசியர்களுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம் காலை திடீரென முடக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குஜராத் கல்வித்துறை அதிகாரிகள் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இணையதளம் சரிசெய்யப்பட்டு அதில் நரேந்திர மோடியை பற்றி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அவதூறான செய்திகள் நீக்கம் செய்யப்பட்டன.

Related articles

Recent articles

spot_img