ஏகாதசி உபவாச நாளில் உண்ணாவிரதம்: ஆன்மிகப் பாதையில் பாஜக.,!

bjp fasting protest - 2026

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று நாடு தழுவிய அளவில் பாஜக.,வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் அவை முழு நாள்களுமே முடங்கிப் போனது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்னைகளைச் சொல்லி காங்கிரஸாரும், ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுகு தேசம் கட்சி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் கோரி அதிமுக.,வினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அவை முழுதும் முடங்கிப் போனது.

இந்நிலையில், நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை பாஜக., நடத்தியது. நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தனர். பாஜக., எம்.பி.க்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும் இன்று உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தார்.

congress non function - 2026

ஆனால், அவரது சென்னை பயணம் முன்னமே திட்டமிடப் பட்டிருந்ததால், சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தனது வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டார். சென்னைக்கு அருகே திருவிடவெந்தையில் இந்திய ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசினார். அடையாறு புற்றுநோய் மையத்துக்கு சென்று ஐம்பதாம் ஆண்டு நினைவுக் கட்டிடங்களைத் திறந்து வைத்தார். பின்னர் மாலை தில்லி சென்று தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இந்நிலையில் பாஜக.,வின் தலைவர் அமித்ஷா, கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். கர்நாடக தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அமித்ஷா, கட்சியினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அண்மையில் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட தொழிலதிபர் ராஜீவ் சந்திரசேகரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தார்.

bjp fasting - 2026

இதனிடையே பா.ஜ.க வினர் இன்று நாடு முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்ட இந்த தினம், சர்வ ஏகாதசி என்றும், ஏகாதசி உபவாசம் மிகவும் சிறப்பானது என்றும், பா.ஜ.க. எப்பொழுதும் ஆன்மீகப் பாதையில் செல்வதன் எடுத்துக்காட்டு இது என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories