மோடி மீது விமர்சனம்! ‘ரிட்டயர்ட் லிஸ்ட்’டில் சேர்ந்து அரசியல்வாதி ஆன பிரவீண் தொகாடியா!

pravin togadia - 2026

சங் பரிவார் அமைப்பில் ஒருவராக பதவியில் இருந்து, விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவராக வலம் வந்த பிரவீண் தொகாடியா, இப்போது ரிட்டயர்ட் லிஸ்டில் சேர்ந்துவிட்டார். அண்மையில் தேர்தல் நடத்தப் பட்டதில் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டுவிட்டார். இதனால் அண்மைக் காலமாக முறைகேடுகளில் சிக்கி அவப்பெயரை சேர்த்து வந்த தொகாடியா, இப்போது அரசியல்வாதி ஆகிவிட்டார்.

நாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாட்டு பயணம் கிளம்பிவிட்டார் என்று தொகாடியா ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரவீண் தொகாடியா ஏப்.17 முதல் காலவரை அற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொகாடியா இதுகுறித்து விளக்கியபோது, வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இல்லை. வறுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நம் மகள்கள் நாட்டில் பாதுகாப்பாக இல்லை. இதை கவனிக்காமல், பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் புறப்பட்டுவிட்டார் என்று மோடியை விமர்சித்தார்.

பிரதமர் மோடி, ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மோடியை விமர்சித்தால் ஊடகங்களில் கவனம் பெறுவோம் என்ற இந்திய ஊடக நாடித்துடிப்பை நன்கு புரிந்துவைத்துள்ள தொகாடியா, தன் உண்ணாவிரதத்துக்கு விளம்பரம் தேட அதே பாணியைக் கையில் எடுத்துள்ளார் என்றே அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories