விவாக ரத்து கேட்ட மனைவி; வாளால் நீதிமன்றத்திலேயே வெட்டிக் கொலை!

murder - 2026

சம்பல்பூர்: கட்டிய கணவன் கொடுத்த தொல்லை தாங்க முடியாமல், விவாகரத்து கோரிய மனைவியை ஒடிஸா நீதிமன்றத்திலேயே வைத்து வாளால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.

பீகார் மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தூர்பங் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் குமார் (24), அதே பகுதியைச் சேர்ந்த சஞ்ஜிதா சௌத்ரியை (18) காதலித்தார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகுதான், கணவனின் தொல்லைகள் சஞ்சிதாவுக்கு தாங்க இயலாமல் போனது. 4 மாத திருமண வாழ்வு கசந்தது. சஞ்ஜிதா மீண்டும் தாய் வீட்டுக்கே திரும்பினார்.

அடுத்து, கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி ஒடிஸா குடும்ப நல நீதிமன்றத்தில் சஞ்ஜிதா மனு தாக்கல் செய்தார். ஆனால் ரமேஷ் குமாரோ, மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறினார். இதை சஞ்ஜிதா ஒப்புக் கொள்ளவில்லை.

இதனால் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வரும் சஞ்ஜிதாவைக் கொல்ல திட்டமிட்டார் ரமேஷ்குமார். நேற்று தன் தாய் லலிதா சௌத்ரியுடன் நீதிமன்றத்துக்கு வந்த சஞ்ஜிதாவிடம், ரமேஷ் குமார் தன்னுடன் வருமாறு வற்புறுத்தினார். ஆனால், சஞ்சிதா மறுக்கவே, ஆத்திரமடைந்த ரமேஷ் குமார் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்தார்.

இதைக் கண்டு அதிர்ந்த சஞ்சிதா, நீதிமன்ற வளாகத்துக்குள் ஓடினார். விடாமல் துரத்திய ரமேஷ் குமார் அவரை மடக்கிப் பிடித்து வாளால் வெட்டினார். இதைத் தடுக்கச் சென்ற லலிதா சௌத்ரிக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சஞ்ஜிதாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

மனைவியை நீதிமன்ற வளாகத்திலேயே வெட்டிக் கொன்ற ரமேஷ் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பரபரப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்திலேயே இத்தகைய சம்பவம் நடந்தது அங்கிருந்தோருக்கு பலத்த அதிர்ச்சியை அளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories