மோடி தர்றதா சொன்ன அந்த ரூ.15 லட்சத்த நான் தர்றேன்… ஆனா…?

Rahul Gandhi Narendra Modi - 2026

மோடி தருவதாகச் சொன்ன ரூ.15 லட்சம் பணம் எங்கே என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க இயலாது என தகவல் ஆணையம் மறுத்தது.

இந்நிலையில், டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் இதற்கான விவாதங்கள் தூள் பறக்கின்றன. அவர்களில் ஒருவர் அந்தப் பணத்தை நானே தருகிறேன் என்று கூறி, ஒரு நிபந்தனையையும் போட்டிருக்கிறார். அவரது கருத்தும், டிவிட்டர் பதிவும்…

மோடி பதினைந்து லட்சம் தருவதாகச் சொல்லி தட்டை ஏந்தித் தெருத்தெருவாகச் சுற்றுபவர்கள் கவனிக்கவும். ரூ.15 லட்சம் பணமே தாரேன். ஆனால், மோடி மக்களுக்கு ஆளுக்குப் பதினைந்து லட்சம் பணம் தருவதாகச் சொன்னதை நிரூபித்து விட்டால். – என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, பிரதமர் மோடி ”பாஜக வெற்றி பெற்றால், கருப்புப் பணம் மீட்கப்படும். அந்தப் பணம் நம் நாட்டில் உள்ள அனைவரின் வங்கிக் கணக்கிலும் உள்ள ரூபாய் 15 லட்சமாக இருக்கும்” என்று கூறினார். ஆனால் ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், இன்னும் யாருடைய கணக்கிற்கும் 15 லட்சம் ரூபாய் பணம் வந்து சேரவில்லை என்று, பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப் படுகின்றன.

இந்நிலையில், இந்தப் பணம் எப்போது வரும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு 2016 நவம்பர் 16 ஆம் தேதி மோகன் குமார் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தகவல் ஆணையம் பதில் அளிக்காமல் இருந்தது. தற்போது, இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம், மோகன் குமாருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதன்படி, இந்த விஷயம் ”தகவல்” வழங்கும் பட்டியலின் கீழ் வரவில்லை என்றும், இதுகுறித்த விவரம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் மீட்கப் பட்டால், அது ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் உள்ள ரூ.15 லட்சத்துக்கு சமமானது என்று மொடி கூறியதாகவும், அனைவர் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று ஒருபோதும் மோடி பேசியதில்லை என்றும் பாஜக.,வினர் கூறி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுலோ, தேர்தல் பிரசாரங்களில், நாட்டு மக்களை ரூ.15 லட்சம் தருவதாகச் சொல்லி மோடி ஏமாற்றி விட்டார் என்றுதான் பேசிவருகிறார்.

2 COMMENTS

  1. The enormity of the problem created and nurtured by the most currupted Congress could not be guessed by any sane person leave alone our most good intentioned and very hard working Prime Minister. It is atrocious for a cheap and empty person like raga who shamelessly attaching ”GANDHI’ to his name to utter such markings.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories