ஓபிஎஸ்-இபிஎஸ் இரட்டையருக்கே இரட்டை இலை! தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

09 July17 Two leaves - 2026

புதுதில்லி: ஓபிஎஸ். இபிஎஸ்., ஆகியோர் அடங்கிய அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட இந்த வழக்கில், அதிமுக.,வுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பால் ஆளும் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், சிலகாலம் அப்படியே இருந்த அதிமுக., பின்னர் இரண்டானது. தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலா என இரண்டு பிரிவாகப் பிரிந்து, அப்போது இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ்., உரிமை கொண்டாட, தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கி வைக்கப் பட்டது.

பின்னர் சசிகலா அணியில் இருந்த ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் இணைந்து அதிமுக.,வை தூக்கி நிறுத்த, அதில் இருந்து வெளியேற்றப் பட்ட சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் பின்னாளில் அமமுக என்று தனிக்கட்சியைத் தொடங்கினார்

two leaves - 2026

அப்போது, இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இருப்பினும், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இருவரும் இணைந்ததால், அவர்கள் இருவர் தலைமையிலான, அ.தி.மு.க.,வுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில், தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், இரட்டை இலைச் சின்னத்தை அதிமுக.,வுக்கு ஒதுக்கியது செல்லும் என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானதே என்றும் கூறி, தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories