ஓபிஎஸ்-இபிஎஸ் இரட்டையருக்கே இரட்டை இலை! தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

09 July17 Two leaves - 2026

புதுதில்லி: ஓபிஎஸ். இபிஎஸ்., ஆகியோர் அடங்கிய அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட இந்த வழக்கில், அதிமுக.,வுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பால் ஆளும் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், சிலகாலம் அப்படியே இருந்த அதிமுக., பின்னர் இரண்டானது. தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலா என இரண்டு பிரிவாகப் பிரிந்து, அப்போது இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ்., உரிமை கொண்டாட, தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கி வைக்கப் பட்டது.

பின்னர் சசிகலா அணியில் இருந்த ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் இணைந்து அதிமுக.,வை தூக்கி நிறுத்த, அதில் இருந்து வெளியேற்றப் பட்ட சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் பின்னாளில் அமமுக என்று தனிக்கட்சியைத் தொடங்கினார்

two leaves - 2026

அப்போது, இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

இருப்பினும், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இருவரும் இணைந்ததால், அவர்கள் இருவர் தலைமையிலான, அ.தி.மு.க.,வுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில், தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், இரட்டை இலைச் சின்னத்தை அதிமுக.,வுக்கு ஒதுக்கியது செல்லும் என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானதே என்றும் கூறி, தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories