சீன அதிபருடன் மோடி பேச்சு: இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்!

Published:

modi china - 2026

பீஜிங்: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது முறையாக தற்போது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

டோக்லாம் எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக வுஹான் நகரில் சீன பிரதமர் ஜி ஜின்பிங்-வுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஒவ்வோர் ஆண்டும் இது போன்ற மாநாடுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என இந்த ஆலோசனையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

 

வரும் 2019-ஆம் ஆண்டு இதுபோன்ற உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அவர் குறிப்பிட்டபோது சீன அதிபரும் மகிழ்ச்சியுடன் இந்தக் கருத்தை ஆமோதித்தார். கடந்த ஐந்தாண்டுகளில் நாம் நிறைய சாதித்துள்ளோம். பலமுறை நாம் சந்தித்துள்ளோம். உங்களுடன் மேலும் ஆழ்ந்த தொடர்பை வளர்ப்பதன் மூலம் இந்தியா-சீனா இடையிலான நட்புறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான புரிதலை நாம் ஏற்படுத்திகொள்ள முடியும் என ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

முன்னதாக, பிரதமரின் சீன பயணம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தது…

திட்டமில்லாத சீன பயணத்தின் நேரலையை டிவியில் பார்த்தேன். நீங்கள் பதற்றமாக உள்ளீர்கள். உங்கள் நினைவிற்காக.. 1. டோக்லம் 2. சீனா பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. அந்தப் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இந்த முக்கியமான பிரச்னைகள் குறித்து நீங்கள் பேச வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர். எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு.

ராகுலின் இந்த டிவிட்டர் பதிவுக்கு பலத்த விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். யார் பதட்டத்தில் உள்ளனர் என்பது குறித்து கட்டுரைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img