பிரதமர் மோடி அணிந்திருந்த ஒரு கோட் விலை ரூ.13 லட்சம் என தான் கேட்டறிந்ததாகவும், இது யாருடைய கிரெடிட் கார்டில் வாங்கியது என்றும் கர்நாடக காங்கிரஸைச் சேர்ந்தவரும் நடிகையுமான குத்து ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா (குத்து ரம்யா) ஒரு டிவிட்டர் பதிவினை இட்டிருந்தார். கர்நாடக தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் மற்றும் பாஜக., செய்தித் தொடர்பாளர்கள் ஆதரவாளர்கள், தங்கள் மனன் போன போக்கில் அவதூறுகளையும் பொய்மூட்டைகளையும் அள்ளித் தெளித்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி டிவிட்டர் பதிவுகளை இட்டு வருகின்றனர். மேடைகளிலும் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் ஒன்றில் சில வாரம் முன்பு அணிந்து இருந்த கோட்டின் விலையை இணையத்தில் கண்டறிந்து டிவிட் செய்துள்ளார். மோடி அணிந்து இருந்த கோட்டின் பெயர் லோரோ பியானா ஜாக்கெட்டாம்.
.@narendramodi ji so fancy! I love the Loro Piana jacket on you! Only 17,000 Euros! Very cheap. Who’s credit card was used to pay for this Modi ji? pic.twitter.com/yK2nsAG63O
— Divya Spandana/Ramya (@divyaspandana) May 1, 2018
இது குறித்த அவரின் டிவிட்டில், ”மோடிஜி மிகவும் பேன்சியாக உள்ளது. நீங்கள் அணிந்து இருக்கும் லோரோ பியானா ஜாக்கெட் மிகவும் பிடித்துள்ளது. வெறும் 17,000 யூரோதான். மிகவும் குறைந்த விலை. யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகையாக இருந்த போது ரம்யா பல படங்களில் மிகக் குறைந்த அளவிலான ஆடைகளை அணிந்து நடித்திருந்தார். அப்போது இந்த டிரஸ் யார் வாங்கிக் கொடுத்தது என்றோம் யாருடைய பணத்தில் இந்த உடை வாங்கியது என்றோ எவரும் கேள்வி எழுப்பியதில்லை. காரணம், தயாரிப்பாளர் தலையில்தான் எல்லாச் செலவும் என்பது தெரிந்த கதை என்பதால், குத்து ரம்யாவிடம் யாரும் அவர் அணிந்த பிகினி டிரெஸ் டூபீஸ் உடை பற்றி எல்லாம் விசாரித்ததில்லை என்று பதிலடிகளும் தூள் பறக்கின்றன.




