பாஜக., ஆளும் மாநிலங்களில் மக்களும், காங். மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்: மோடி

modi in kalaburgi1 - 2026

பிரதமர் நரேந்திர மோடி, இன்று கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில், குல்பர்கா என்று வழங்கப்பட்ட கலபுர்கியிலும், பெல்லாரியிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.  அப்போது, ஆளும் காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் மக்கள் ஆதரவளிக்கின்றனர். வெவ்வேறு வயதினரும் கூட்டங்களுக்கு வந்து பாஜக.,வுக்கு ஆதரவு தருகின்றனர். கர்நாடக பாஜக., இத்தகைய ஆதரவாளர்களால் வாழ்த்தப் பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் மோடி.

modi in kalaburgi - 2026

கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக அரசு தூங்கிக் கொண்டிருந்தது, அதன் திறன் அப்படி. அதனால் மாநிலம் தொல்லையைச் சந்தித்துள்ளது. விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். ஜவுளித் துறை, தொழில்துறை ஆகியவை எல்லாம் இங்குள்ள ஊழலால் தள்ளாடிப் போயிருக்கிறது. எனவேதான் மக்கள் காங்கிரஸை புறந்தள்ளுவதற்குத் தயாராக இருக்கின்றனர் என்றார் மோடி.

வரும் 2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். இந்த சாதனையை தேசிய ஜனநாயகக் கூட்டணி சாத்தியமாக்கும். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக இந்தக் கூட்டணி தொடர்ந்து பணி செய்யும்… என்று உறுதி அளித்தார் மோடி.

பாஜக., எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினருமே மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார் மோடி.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

 

பெங்களூருவை சீரமைப்பதில் கர்நாடக பாஜக., அக்கறை காட்டும் என்று கூறியுள்ள மோடி, இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பாஜக., பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார். பெங்களூரு நகரமைப்பில் காங்கிரஸ் எவ்வளவுக்கு அலட்சியமாக இருந்துள்ளது என்றும், அதனால் நகரம் மோசமான உள்கட்டமைப்புடன் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் மோடி.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களை, காங்கிரஸ் கட்சி மதிப்பதே இல்லை என கலபுர்கியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள குல்பர்கா, பின்னாளில் கலபுர்கி என்று பெயர் மாற்றம் பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமான குல்பர்கா என்ற கலபுர்கியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் மோடி. அப்போது அவர், ராணுவ வீரர்கள் சர்ஜிக்கல் தாக்குதலை முன்னெடுத்த போது, அது குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சி, தம்மிடம் ஆதாரங்களைக் கேட்டதாகத் தெரிவித்தார்.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

கர்நாடகா என்றாலே அதன் பொருள் வீரம்தான். ஆனால் ஃபீல்டு மார்ஷல் ஜெனரல் கரியப்பாவையும், முன்னாள் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் திம்மையாவையும் காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பது வரலாற்று ஆதாரமாக உள்ளது என்றார் அவர்.

காஷ்மீரின் கத்துவா சம்பவத்தைக் கண்டித்து தில்லியில் மெழுகுவர்த்திகள் ஏந்தி காங்கிரஸ் ஊர்வலம் போனது. அதேநேரம், கர்நாடக மாநிலம் பிடாரில் தலித் சிறுமி சித்தரவதைக்கு உள்ளானபோது காங்கிரஸ் கட்சியின் மெழுகுவர்த்திகள் எங்கே போயின என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி.


தொடர்ந்து கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியை, ஊழல் அரசு எனப் பொருள்படும் வகையில், ஹிந்தியில் சித்தா-ரூபையா-சர்க்கார் என வர்ணித்தார் பிரதமர் மோடி.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் தொடர்ந்து, பெல்லாரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் மோடி. அப்போது அவர், பெல்லாரியின் வரலாற்றுத் தடங்களை காங்கிரஸ் அரசு முற்றிலும் அழித்து விட்டது என்று குற்றம்சாட்டினார்.

கர்நாடகாவில் ஊழல் அரசு நடைபெறுகிறது என்று வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். கர்நாடக காங்கிரஸ் அரசு உறங்கும் நிலையில் இருப்பதால், மத்திய அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கும் நிதியை அது பயன்படுத்தவே இல்லை என பிரதமர் மோடி சாடினார். பின்னர் இதனைத் தம் டிவிட்டர் பதிவிலும் குறிப்பிட்டார் மோடி.

3 COMMENTS

  1. பா.ஜ‌.க.ஆட்சியில் தான் கத்தார், டிமாண்ட் ஸ்டிரேஷன்,சாமான்யர்கள் படும் பாடு எமர்ஜென்சி யில் கூட இல்லை.

  2. The Election Manifesto of the Con party is shocking, to say the least! It’s blatantly divisive and pro-Muslim, which is against the Constitution. Therefore, this divisive Con party should be taught a good lesson by the people!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories