February 20, 2026, 11:53 PM
26.7 C
Chennai

கர்நாடகம் முடிந்தது; அமித் ஷாவின் அடுத்த இலக்கு… தமிழகம்!

amith-sha-ediyurappa

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற இலக்கை நோக்கி அரசியல் களத்தில் இயங்கி வரும் அமித் ஷாவின் அரசியல் தந்திரங்கள், கர்நாடகத்தில் எந்த அளவுக்கு எடுபடப் போகிறது என்பது அடுத்த இரு தினங்களில் தெரிந்து விடும். இருந்தாலும், தனது ஒரு இலக்கு முடிந்து விட்ட திருப்தியுடன், அடுத்த இலக்காக தமிழகத்தை நோக்கிக் குறி வைத்துள்ளார் அமித்ஷா என்கின்றனர் பாஜக.,வினர்.

தமிழகத்தில் பாஜக., வளராத கட்சியாக, தேய்ந்து கொண்டே வருகிறது என்பது தமிழகத்தில் பாஜக., அபிமானிகளின் கருத்தாக உள்ளது. தனித்துப் போட்டியிட்டு குமரியில் ஒரு எம்.எல்.ஏ.,வும் கோவை உள்ளிட்ட சில இடங்களில் கணிசமான வாக்கு வங்கியும் கொண்டிருந்த கட்சி, தற்போது தேய்ந்து கொண்டே வந்துள்ளது என்று புகார்கள் கூறப் படுகின்றன. அதற்கு கட்சியில் உள்ள மாநிலத் தலைமை, ஊடகப் பின்புலம் இல்லாமை, கோஷ்டிப் பூசல்கள், சாதி ரீதியாக கட்சியை அவரவர் வளைத்துப் போட்டுள்ளது, அவரவர் சாதிக்காரர்களுக்கு முன்னுரிமை, மக்களை ஈர்க்கும் வகையில் தலைவர் எவரும் இல்லாதது என்று பல காரணங்களை அடுக்கி வருகின்றனர் தலைமையிடம்!

amit-shah

இத்தகைய பின்னணியில்தான், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை முன்வைத்து காய்களை நகர்த்தி வருகிறது தேசியத் தலைமை. தமிழகத்தில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட குமரி புயல் பேரிடர், தேனி குரங்கனி மலை தீவிபத்து ஆகியவற்றின் போதான நிர்மலா சீதாராமனின் அணுகுமுறை, ராணுவ கண்காட்சி, மத்திய திட்டங்கள் ஆய்வு என்ற வகையில் சாமானியர்களுடனான அவரின் பரிமாற்றம் என்று களத்தில் இறக்கி விட்டு ஆழம் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிந்த சூட்டோடு, தமிழகத்தில் பாஜக.,வை வளர்க்க, பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இது குறித்து தமிழக பாஜக., தலைவர்கள் சிலரிடம் அமித் ஷா பேசத் துவங்கியுள்ளார். தமிழகத்தில், கட்சியை வேகமாக வளர்க்க வேண்டும் என்ற முயற்சியில் களம் இறங்கியுள்ள அமித்ஷா, விரைவில் தமிழகம் வந்து கட்சித் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

தமிழகத்தில் பாஜக.,வை வளர்க்க இதுவரை தமிழக தலைவர்கள் முன்வைத்திருக்கும் தகவல்களை நேரடியாகப் பெற்று, அவற்றை பரிசீலிக்க உள்ளார். தொடர்ந்து, இங்கிருக்கும் அரசியல் சூழல், யாரை வைத்து தொடர்ந்து கட்சி அரசியலை நடத்துவது என பலவற்றையும் ஆலோசிக்க உள்ளாராம். இதனை பாஜக., மூத்த தலைவர்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்கின்றனர்.

rajini-makkal-mandram

ஒருபுறம் ரஜினி, ஆன்மிக அரசியலை முன்னெடுத்து வைக்க, தனிக்கட்சி துவங்கி பாஜக.,வுடன் கூட்டணி வைக்கலாமா என்று மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருக்க, இன்னொரு புறம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாங்கள் ஒன்றும் ரஜினியுடன் கூட்டணிக்கு அலைந்துகொண்டிருக்கவில்லை என்று கூறி பின்னணி அரசியலை அடக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Topics

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Entertainment News

Popular Categories